‘அயோத்தி’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் மந்திர மூர்த்தி தற்போது நடிகர் விஜய் ஆண்டனியுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த புதிய திரைப்படம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
இந்த படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் மூன்றாவது முறையாக ரம்யா நம்பீசன் கதாநாயகியாக இணைவது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ஆண்டனி – ரம்யா நம்பீசன் கூட்டணி ஏற்கனவே வெற்றிகரமாக இருந்ததால், இந்த புதிய இணைப்பு மீண்டும் திரையில் நல்ல ரசனையை தரும் என திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

இப்படத்திற்கு இசையமைப்பாளராக சித்து குமார் பணியாற்றுகிறார். அவரின் இசை சமீப காலங்களில் பல ஹிட் பாடல்களை வழங்கியுள்ளதால், இந்த படத்தின் பாடல்கள் மீது கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
படத்தின் கதை, ஜானர் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை என்றாலும், மந்திர மூர்த்தியின் முந்தைய படைப்புகள் சமூக சார்ந்த கதைகளை வலுவாக சொல்லியுள்ளதால், இந்த படமும் அதேபோன்ற ஆழமான கதையம்சம் கொண்டிருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Listen News!