இந்திய சினிமாவின் இரண்டு வலிமைமிக்க தரப்புகளைச் சேர்ந்தவர்களாக அமீர்கான், மற்றும் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் காணப்படுகின்றனர். இவர்கள் இருவரும் ஒரு படம் ஒன்றில் இணைகின்றனர் என்கின்ற தகவல் தற்போது இந்திய திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமீர்கான், சமீபத்தில் ஒரு ஹிந்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “நான் விரைவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் பெரிய திட்டத்தில் இணைய இருக்கிறேன். அது ஒரு சூப்பர் ஹீரோ படம். அவருடைய ‘கைதி 2’ முடிந்ததும் இப்படம் தொடங்கும்,” எனக் கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமாவில் 'கைதி', 'விக்ரம்', 'லியோ' ஆகிய படங்களின் மூலம் மாபெரும் வெற்றிகளைப் பெற்றவர். அதேபோல, அமீர்கான், ‘தங்கல்’, ‘த்ரீ இடியட்ஸ்’, ‘ரங்க் தே பசந்தி’, ‘லகான்’ உள்ளிட்ட படங்களால் உலகளவில் இந்திய சினிமாவுக்கு பெரும் பெயர் சேர்த்தவர்.
இவர்கள் இருவரும் இணைவது என்றால்,படம் மிகவும் பிரமாண்டமானதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை என சில விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த படம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் முதல் ஹிந்தி படம் ஆகும். இதுவரை அவர் தமிழில் மட்டுமே வேலை செய்துள்ளார். அமீர்கான் போன்ற பெரிய ஹீரோவுடன் நேரடியாக பணியாற்றுவது என்பது, அவருடைய அழுத்தம், கதை சொல்லும் திறமை போன்றவை இந்தியா முழுக்க பரவியிருப்பதை நிரூபிக்கிறது.
Listen News!