• May 04 2024

தென்னிந்திய சினிமாவின் பணக்கார நடிகர் யார் தெரியுமா?- இத்தனை ஆயிரம் கோடி சொத்து வைத்திருக்கின்றாரா?

stella / 9 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் யாவரும் தாம் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு  பல்வேறு தொழிகளில் முதலீடு செய்திருக்கிறார்கள். அதன் மூலமும் நிரந்தரமான வருமானம் வந்து கொண்டிருக்கிறது எனலாம்.

அந்த வகையில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது  தெலுங்கு, தமிழ், இந்தி படங்களில் நடித்து வரும் நாகர்ஜுனா தான் தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் என்று கூறப்படுகின்றது.அவரின் சொத்து மதிப்பு ரூ. 3 ஆயிரம் கோடி ஆகும் என செய்திகள் வெளியாகியுள்ளது.


2022ம் ஆண்டில் நாகர்ஜுனாவின் சொத்துமதிப்பு ரூ. 3 ஆயிரத்து 10 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் ஒன்றுக்கு ரூ. 20 கோடி வரை வாங்குகிறாராம்.மேலும் விளம்பர படங்களில் நடிக்க ரூ. 2 கோடி வாங்குகிறாராம்.சினிமாவைத் தவிர பல்வேறு தொழில்களில் முதலீடு செய்திருக்கின்றாராம்.

 தன் தந்தை நாகேஸ்வர ராவ் துவங்கிய அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் பார்ட்னராக இருக்கிறாராம்.மேலும் ஹைதராபாத்தில் மீடியா ஸ்கூல் ஒன்றை நடத்தி வருகிறார். இது தவிர்த்து ஹைதராபாத்தில் கன்வென்ஷன் சென்டர் வைத்திருக்கிறார். மா டிவி சேனலை துவங்கினார். அதன் பிறகு அதை விற்றுவிட்டார். இப்படி பல்வேறு தொழில்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தால் தான் நாகர்ஜுனாவின் சொத்து மதிப்பு ரூ. 3 ஆயிரம் கோடியை தாண்டியிருக்கிறது.


பணக்கார தென்னிந்திய நடிகர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் தெலுங்கு நடிகரான வெங்கடேஷ். அவரின் சொத்துமதிப்பு ரூ. 2 ஆயிரத்து 200 கோடி ஆகும். இதையடுத்து ரூ. 1, 650 கோடி சொத்துடன் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார் சிரஞ்சீவி. ரூ. 1, 370 கோடி சொத்துக்களுடன் நான்காவது இடத்தில் இருப்பது சிரஞ்சீவியின் மகனான நடிகர் ராம் சரண் என்றும் கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement

Advertisement