• May 03 2024

ஆல்யா மானசா நடிக்கும் புதிய சீரியல் எது தெரியுமா?- கணவருடன் ஒன்றாக சேர்ந்திட்டாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் மானாட மயிலாட என்னும் நிகழ்ச்சியின் அறிமுகமாகியவர் தான் ஆல்யா மானசா. இதனைத் தொடர்ந்து இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி சீரியலில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.இந்த முதல் சீரியலே இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்த சீரியலைத் தொடர்ந்து டாப் நாயகியாக இருக்கும் இவர் ராஜா ராணி சீரியலில் தன்னுடன் ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐலா மற்றும் அர்ஸ் என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.


இதில் ஆல்யா ராஜா ராணி சீசன் 2 சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் அர்ஸ் பிறந்தான். இதனால் சீரியலை விட்டு விலகியதோடு குழந்தைகளை கவனித்தும் வருகின்றார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பே தான் புதிய தொடரில் கமிட்டாகி இருப்பதாக தெரிவித்தாரே தவிர எந்த தொலைக்காட்சி என்ன தொடர் என கூறவில்லை. தற்போது புதிய சீரியலுக்கான படப்பிடிப்பை ஆல்யா மானசா தொடங்கியுள்ளார்.


சரிகம புரொடக்ஷன்ஸ் தயாரிக்க சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடரில் தான் நடிக்கிறாராம்.இதனால் ரசிகர்கள் செம குஷியில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement