• May 01 2024

திருமணம் முடிந்தவுடன் தனது காதல் மனைவியுடன் ராஜா ராணி சீரியல் செந்தில் எங்கு சென்றிருக்கிறார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியயில் ஏகப்பட்ட சீரியல்கள் ரசிகர்களைக் கவரும் விதமாக சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடும் சீரியல் தான் ராஜா ராணி சீசன்2.


தாய் தந்தையை இழந்து தனது கனவுகளை அடைய முடியாமல் திருமணத்தில் இணைந்த பெண் தனது கனவை எவ்வாறு நிறைவேற்ற போராடுகிறாள் என்றும் இதற்கு கணவன் எவ்வாறு துணை நிற்கின்றான் என்றும் இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.


மேலும் இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்த ஆல்யா மானசா விலகியதும் அவருக்கு பதிலாக ரியா என்பவரும் வில்லியாக நடிதது வந்த அர்ச்சனா விலகியதும் செல்லம்மா சீரியல் அர்ச்சனா வில்லியாகவும் நடித்து  வருகின்றனர்.


அந்த வகையில் இந்த சீரியலில் செந்தில் என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் பாலாஜி. குறும்படங்களின் மூலம் பிரபல்யமான இவர் இந்த சீரியல் மூலம் தனக்கென ஓர் அடையாளத்தைப் பிடித்துள்ளார். அத்தோடு அண்மையில் தான் இவருக்கு திருமணமும் முடிவடைந்தது.


இந்த நிலையில் பாலாஜி தனது காதல் மனைவியுடன் சீரியல் நடிகை ஸ்ரீநிதி வீட்டுக்குச் சென்றுள்ளார். இது குறித்த புகைப்படமானது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement