• Jul 01 2025

"அஃகேனம்" பெயர் வைத்ததன் பின்னணி என்ன தெரியுமா.? உண்மையை உடைத்த அருண்பாண்டியன்!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் புதுமையை நோக்கி பயணிக்கும் படங்களுக்கென தனி அடையாளம் உள்ளது. அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ள புதிய திரைப்படம் தான் "அஃகேனம்". ஜூலை 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ள இப்படம், ரசிகர்களிடம் வித்தியாசமான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


உதய் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு, முன்னணி நடிகர்  அருண்பாண்டியன் தயாரிப்பாளராக செயல்பட்டு வருகின்றனர். நடிகை கீர்த்தி பாண்டியன், “தும்பா” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடையாளம் பெற்றவர்.

அவர் இந்த "அஃகேனம்" படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் எதையும் துணிந்தெடுக்கும் தைரியமான பெண் என்பதைக் குறிக்கும் எனக் கூறப்படுகின்றது. இப்படம் அவரது நடிப்புத் திறனை புதிய மையத்தில் கொண்டு செல்லும் வகையில் அமையும் என தயாரிப்புக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


தற்பொழுது நேர்காணல் ஒன்றில் "அஃகேனம்" என்ற தலைப்பு ஏன் வைத்தார்கள் என்ற கேள்விக்கு அருண் பாண்டியன் விளக்கமளித்துள்ளார். அதன்போது அவர், " இப்படம் மூன்று பேரின் கதையை லிங்க் செய்வதால் இந்த படத்திற்கு அஃகேனம் என்ற தலைப்பு வைத்தோம்." எனக் கூறியிருந்தார். 

Advertisement

Advertisement