• May 12 2024

மணிரத்னம் செய்த பெரிய தப்பு ? கண்டுபிடித்த ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் படம் தொடர்பாக மணிரத்னம் செய்த பெரிய தவறு குறித்து ரசிகர்கள் கண்டுபிடித்து பேசிவருகிறார்கள்.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களுக்கு அதன் அருமை தெரியும். நாவலை படிக்கும்போதே சோழ நாட்டுக்கு நாமும் சென்றுவிடுவோம். வார்த்தைகளால் நம்மை ஈர்த்த கல்கியின் படைப்பை திரையில் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியது தான் மணிரத்னம் செய்த முதல் தவறு.

மேலும் அவர் 100 அல்ல 1000 சதவீதம் முயற்சி செய்தாலும் படத்தில் இது சரியில்லை, அது சரியில்லை, இதை படமாக்கியிருக்கவே கூடாது, இது மணிரத்னம் ஸ்டைலே இல்லை, தேவையே இல்லாத வேலை என்று விமர்சனம் எழும் என்பது மணிரத்னத்திற்கும் தெரியும்.அத்தோடு  அதையும் தாண்டி அவர் படம் எடுத்தது இரண்டாவது தவறு.

நாவலை படித்தவர்களை நிச்சயம் திருப்திபடுத்தவே முடியாது என்பது தெரிந்தும் அதை படமாக்கியது மூன்றாவது தவறு.அத்தோடு பொன்னியின் செல்வனை படமாக்கினால் அதை பாகுபலி உள்ளிட்ட பெரும் படங்களுடன் ஒப்பிடுவார்கள் என்பதும் மணிரத்னத்திற்கு தெரியும்.

தான் கற்ற மொத்த வித்தையையும் திரையில் காட்டிவிட்டார் மணிரத்னம்.அத்தோடு அப்படி இருந்தும் நாவலை படித்தவர்களுக்கு படம் பிடிக்கவில்லை. மணிரத்னம் ஸ்டைல் படங்களுக்கான ரசிகர்களுக்கும் பொன்னியின் செல்வன் திருப்தி அளிக்கவில்லை.

2கே கிட்ஸ் தான் படத்தை கொண்டாடுகிறார்கள்.மேலும் ஒரு மாபெரும் படைப்பை திரையில் காட்டிய மணிரத்னத்தின் செயலை பாராட்டுபவர்களை விட குறை சொல்பவர்களே அதிகம். இது தான் பொன்னியின் செல்வன் படத்திற்கு பெரும் பிரச்சனையே.

Advertisement

Advertisement

Advertisement