• May 13 2024

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டிலிருந்து திருடிய நகையை வேலைக்காரி என்ன செய்துள்ளார் தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தான் தற்போது திரையுலகில் பேசு பொருளாக மாறி இருக்கின்றது. அதாவது லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் உட்பட மொத்தம் 3கோடியே 60லட்ஷம் ரூபாய் பெறுமதியான நகைகள் காணாமல் போயிருப்பதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா புகார் ஒன்றினை அளித்தார். 


இதனையடுத்து அவரின் வீட்டில் வேலை புரிந்த பணியாளர்கள் 3பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் வேலைக்காரி ஈஸ்வரி மற்றும் அவரது கணவரிடம் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் தான் அந்த நகையைக் கொள்ளை அடித்தமை தெரிய வந்தது.


அந்த வகையில் கைது செய்யப்பட்ட வேலைக்காரி 2019-ஆம் ஆண்டிலிருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் நகைகளை சிறுக சிறுக எடுத்து விற்பனை செய்து பணமாக மாற்றி உள்ளமை தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீஸார் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement