• May 05 2024

விஜய் மனோபாலாவின் உடலுக்கு நேராகச் சென்று அஞ்சலி செலுத்த என்ன காரணம் தெரியுமா?- இப்படியொரு உறவு இருக்கா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பல்வேறு வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் மனோபாலா. கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த மனோபாலா நேற்று உயிரிழந்தார். அவரின் மறைவு தமிழ் சினிமா ரசிகர்களையும், திரையுலக பிரபலங்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

அவரின் மறைவுச் செய்தி அறிந்ததும் அவரின் இல்லத்திற்கு படையெடுத்த தமிழ் சினிமா பிரபலங்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.நடிகர்கள் விஜய், சித்தார்த், யோகிபாபு, விஜய் சேதுபதி, நட்டி நட்ராஜ், தலைவாசல் விஜய், நாசர், சாந்தனு மற்றும் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், எச்.வினோத், லோகேஷ் கனகராஜ், பாக்கியராஜ், சுந்தர் சி, சமுத்திரக்கனி உள்பட ஏராளமான பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். 


இதுதவிர அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக நிர்வாகி ஜெயக்குமார் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் மனோபாலாவின் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.இந்த நிலையில் நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தும் போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்பன இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதிலும் விஜய் ஏன் நேராகச் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் பொதுவாக ஷுட்டிங்ல யார் கிட்டையும் பேசமாட்டாரு என்று சொல்வாங்க.ஆனால் மனோபாலாகிட்ட எப்போதும் வெளிப்படையாகப் பேசுவாராம். மனோபாலாவை எப்போதும் அண்ணா அண்ணா என்று கூறுவாராம். மனோபாலாவை வீட்டுக்கு அழைத்து தானே தோசை எல்லாம் சுட்டுக் கொடுப்பாராம். தன்னுடைய எல்லாப்படத்திலையும் மனோபாலா இருக்க வேண்டும் என்று நினைப்பாராம். விஜய் ரொம்ப நல்ல பையன் என்று மனோபாலாவே ஓர் பேட்டியில் கூறியுள்ளார்.


ஆகையால் விஜய் தன்னுடைய அண்ணன் போல மனோபாலாவைப் பார்ப்பதால் தான் அவருடைய உடலுக்கு நேரடியாகச் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement