தெலுங்கு பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்ட பாடகி கல்பனா இவர் பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை பாடி பிரபலமான கலைஞர் தற்கொலை முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத்தில் நிஜாம்பேட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது.அவசரமாக காவல்துறையினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டுவிட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது முழுவதுமாக குணமடைந்துள்ளார்.மேலும் இவர் தற்போது அவர் குறித்து எழுந்து வரும் வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
குறித்த பேட்டியில் வதந்திகள் பரப்பிய மீடியாக்கள் மக்களை பார்த்து அவரது வாழ்கையில் ஏற்படாத விடயங்களை ஏன் வதந்திகளாக பரப்பினீர்கள் என கேள்வி கேட்டுள்ளார். இதில் அவர் "சினிமாக்காரங்கனா உங்களுக்கு அவ்வளவு மட்டமா ? நம்ம வீட்ல இருக்கிற சகோதர சகோதரிகளுக்கு பிரச்சினை இல்லையா ?நம்ம அதெல்லாம் பாக்கிரமா?எதுக்கு எங்க மேல சேத்த வாரி அடிக்கிறீங்க " என மிகவும் கொந்தளித்து பேசியுள்ளார்.
Listen News!