ரஷ்மிகா மந்தண்ணா, இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார்.
இவர் கர்நாடகத்தில் உள்ள குடகு மாவட்டத்தின் விராஜ்பேட்டையில் கொடவ குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். மேலும் இவர் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்கள் நடித்துள்ளார்.
தற்போது இவர் நடிப்பில் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் நடிப்பதற்காக நடிகை ராஷ்மிகா மந்தனா ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார்.
ராஷ்மிகா முதன் முதலில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், தமிழில் இவர் நடித்த முதல் படமாக சுல்தானுக்காக ராஷ்மிகா மந்தனா ரூ. 30 மட்டுமே சம்பளமாக வாங்கியுள்ளாராம்.
Listen News!