• May 10 2024

தேசிய விருதையடுத்து சர்வதேச விருதைப் பெறவுள்ள சூர்யா... அதுவும் இந்தப் படத்திற்காக... மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகத் திகழ்ந்து வருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி இருப்பினும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்த படம் ஜெய் பீம். இதில் இவர் வக்கீலாக நடித்திருப்பார் சூர்யா. நீதிபதி கே சந்துரு அவர்களின் வழக்கு தொடர்பான அனுபவங்களை கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது. 


மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளியாகி இருந்த இதனை சூர்யா ஜோதிகாவின் 2டி நிறுவனம் தான் பிரமாண்டமாக தயாரித்திருந்தது.

பொய் வழக்கில் கைது செய்யப்படும் ராஜகண்ணன் என்ற இருளர் லாக்கப்பில் அடித்துக் கொள்ளப்படும் கதைக்களத்தை கொண்டு ரசிகர்களின் மனதை உருக்கி இருந்தார் இயக்குநர். 


இப்படம் வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் இருந்து பல பாராட்டுகளை பெற்று வந்தது. அதுமட்டுமல்லாது 94 ஆவது அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருந்த இந்தப் படம் நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் இந்த வருட தொடக்கத்தில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றது.

இந்நிலையில் தற்போது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் விழாவில் ஜெய் பீம் திரையிடப்பட உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது வரும் நவம்பர் 20-ஆம் தேதி முதல் நவம்பர் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் 45 திரைப்படங்கள் கௌரவிக்கப்படவுள்ளது.


அந்தவகையில் இதில் 20 ஆவணப்படங்களும், 25 கமர்ஷியல் திரைப்படங்களும் அடங்குவதாக கூறப்படுகின்றது. ஆவண குறும்பட பட்டியலில் நவீன் குமாரின் லிட்டில்  விங்ஸ் இடம் பெற்றுள்ளது. அதேபோல கமர்சியல் திரைப்பட பட்டியலில் சூர்யாவின் ஜெய்பீம், கிடா, குரங்கு பெடல் உள்ளிட்ட படங்கள் தேர்வாகியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விழாவானது கோவாவில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் சூரரை போற்று படம் சமீபத்தில் தேசிய விருதை வென்றிருந்த நிலையில் ஜெய் பீம் படமும் தற்போது 53-ஆவது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்று பலரிடமிருந்தும் பாராட்டுகளை பெற்று வருகிறது. 

Advertisement

Advertisement

Advertisement