தமிழ் திரையுலக வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த திரைப்படங்களில் ஒன்று, நடிகர் விஜய்யின் “தெறி”, தற்போது ரீ-ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர் எஸ். தாணு அறிவித்தார். ரிலீஸ் ஆனபோது கிடைத்த வெற்றி மற்றும் வரவேற்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தெறி திரைப்படத்தை மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர்.

வெளியான தகவல்கள் படி, தெறி ரீ-ரிலீஸ் ஜனவரி 23ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பாக, தெறி திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியானது, இது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் ரசிகர்கள் இதை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர்.
ஆனால், தெறி ரீ-ரிலீஸ் அறிவிப்புக்குப் பிறகு, அதே நாளில் வெளிவரும் “திரௌபதி 2” திரைப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி தயாரிப்பாளர் எஸ். தாணுவிடம் ஒரு தனிப்பட்ட கோரிக்கை விடுத்தார். திரௌபதி 2 திரைப்படம் அதே நாளில் வெளிவருவதால், இரு படங்களும் ஒரே நாளில் மோதுவதைத் தவிர்க்க, தெறி திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றக் கோரினார்.

இந்த கோரிக்கையை எஸ். தாணு ஏற்று, தெறி ரீ-ரிலீஸ் தேதியை ஒத்திவைத்தார். இதுபற்றி இயக்குநர் மோகன் ஜி தனது சமூக வலைத்தள கணக்கில், “எங்களின் வேண்டுகோளை ஏற்று விஜய் சாரின் தெறி திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்த கலைப்புலி தாணு சார் அவர்களுக்கு என் தயாரிப்பாளர் மற்றும் எங்கள் திரௌபதி 2 திரைப்பட குழு சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
இதன் மூலம், திரௌபதி 2 திரைப்படம் தனது திட்டமிட்ட ரிலீஸ் நாளில் பிரச்சினையின்றி வெளியாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், தெறி ரீ-ரிலீஸ் புதிய நாளில் விஜய் ரசிகர்களை சந்தோஷமாகச் சந்திக்க உள்ளது. எனினும் இந்த ஒத்திவைப்பு விஜய் ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!