• May 12 2024

பிரதாப் போத்தன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய இயக்குநர் மணிரத்னம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வந்தவர் தான் பிரதாப் போத்தன். இவர் இன்றைய தினம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.

அவரது உடலுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அந்த வகையில்இயக்குநர் மணிரத்தினமும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார். குஷ்பூ உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்திப் படங்களில் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திரையுலகில் அறிமுகமாகி தற்போது 44 ஆண்டுகள் கடந்துள்ளன.இவர் இயக்கத்தில் 10க்கும் மேற்பட்ட சிறப்பான படங்கள் வெளியாகியுள்ளன.

மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் இவர் படங்களை இயக்கியுள்ளார். மலையாளத்தில் டெய்சி, ரிதுபீடம், ஒரு யாத்ரா மொழி உள்ளிட்ட படங்களையும், தமிழில் மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா, மைடியர் மார்த்தாண்டன், ஆத்மா, மகுடம், சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன் உள்ளிட்ட படங்களையும், தெலுங்கில் சைதன்யா என்ற படத்தையும் இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

ஐ லவ் யூ டா அமீர்- ஒருவழியாக காதலுக்கு சம்மதம் தெரிவித்த பிக்பாஸ் பாவானி 

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement