• May 07 2024

கஜினி படம் போல தான் தனது கணவரையும் அசின் காதலித்தாரா?- அச்சச்சோ இப்படியொரு சம்பவம் நடந்திருக்கா?

stella / 10 months ago

Advertisement

Listen News!


 தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் அசின்.இப்படத்தில் இவருடைய துறுதுறுத்தனமும், நடிப்பும், அழகும் தமிழ் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது.இதனை அடுத்து தெலுங்கு பல மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார்.

அதுவும் தமிழில் விஜய்யுடன் நடித்த சிவகாசி, போக்கிரி ஆகிய இரண்டு படங்களும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. அதனையடுத்து சூர்யாவுடன் நடித்த கஜினி படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது.  கஜினி கொடுத்த வெற்றி அவரை பாலிவுட்டுக்கும் அழைத்து சென்றது. அங்கு சென்றும் தனது திறமையை காட்டிய அவர் சல்மான் கான், அஜய் தேவகான், அக்‌ஷ்ய குமார் உள்ளிட்டோருடன் நடித்து பீக்கிற்கு சென்றார். 


மிகப்பெரிய ஸ்டாராக வலம் வந்துகொண்டிருந்த அசின்  கடந்த 2016ஆம் ஆண்டு ராகுல் ஷர்மா என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இந்தத் தம்பதிக்கு ஆரின் என்ற ஒரு மகள் இருக்கிறார்.

அசின் ஏற்றிருந்த கதாபாத்திரங்களிலேயே கஜினி படத்தில் ஏற்றிருந்த கல்பனா கதாபாத்திரம் எல்லோருக்கும் ஃபேவரைட். விளம்பரத்தில் நடிப்பவராக தோன்றி சூர்யா மிகப்பெரிய தொழிலதிபர் என்று தெரியாமலேயே அவரை காதலிக்கும்படி அந்தக் கதாபாத்திரம் அமைந்திருக்கும். ஒவ்வொரு சீனிலும் தனது வெகுளித்தனத்தையும், போலி பந்தாவையும் சூர்யாவிடமே வெளிப்படுத்தி அதகளம் செய்திருப்பார்.

இந்தச் சூழலில் கஜினி படத்தில் நடந்ததுபோல் அவரது உண்மை வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. அதாவது அசினின் நண்பர் அக்‌ஷய் என்பவர் மூலம்தான் ராகுல் ஷர்மா அசினுக்கு அறிமுகமானாராம். ராகுல் ஷர்மாவும், அசினும் தொடர்ந்து டச்சில் இருந்திருக்கின்றனர். ஆனால் அசினுக்கோ ராகுல் ஷர்மா மைக்ரோமேக்ஸ் மொபைல் கம்பெனியின் நிறுவனர் என்பது தெரிந்திருக்கவில்லை.


 இதற்கிடையே ராகுலின் குண நலன்கள் பிடித்துப்போக அசின் காதலிலும் விழுந்துவிட்டார். ஒருகட்டத்தில் அசினின் நண்பர் அக்‌ஷய் அவரிடம் ராகுல் ஷர்மாதான் மைக்ரோமேக்ஸின் ஓனர் என கூற அசினுக்கு ஷாக்குடன் ஆச்சரியமும் தோன்றியதாம். இத்தனை நாட்கள் தான் இவ்வளவு பெரிய தொழிலதிபர் என்று சொல்லாமல் எவ்வளவு எளிமையாக இருந்திருக்கிறார் என ஆச்சரியப்பட்டு காதலும் வலுவடைந்திருக்கிறது. 

இதற்கிடையே ராகுலும் அசினை காதலிக்க ஆரம்பித்திருக்கிறார். தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement