தனுஷ் நடிக்கும் வாத்தி திரைப்படத்தின் தமிழக ரிலீஸில் உரிமத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக பல ஆண்டு காலமாக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் கோலிவுட்டில் மட்டுமல்லாது பாலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரையுலகிலும் கலக்கி இன்று டோலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்திருக்கின்றார். அந்த வகையில் இவரின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'வாத்தி'. இப்படத்தினை வெங்கி அட்லூரி இயக்கியிருப்பதோடு இப்படத்தில் தனுஷ் ஒரு வாத்தியாராக நடித்துள்ளார்.
இப்படமானது ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி உள்ளது. அதாவது இப்படத்தினை தமிழில் 'வாத்தி' என்ற பெயரிலும், தெலுங்கில் 'சார்' என்ற பெயரிலும் ரிலீஸ் செய்ய உள்ளனர் படக்குழுவினர்.
மேலும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக இப்படம் அமைந்து உள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருப்பதோடு, யுவராஜ் ஒளிப்பதிவும் செய்துள்ளார்.அத்தோடு நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் நாக வம்சி தயாரித்துள்ளார்.
இப்படத்தின் உடைய ஷூட்டிங் நிகழ்வுகள் யாவும் முடிவடைந்த நிலையில் பின்னணி பணிகள் விறுவிறுப்பாகவும், மும்முரமாகவும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று படத்தின் பெஸ்ற் லுக் தற்போது வெளியாகியுள்லது. மேலும் டீசர் இன்றுவெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி வெளியாக் உள்ளது.
இந்த படத்தை தமிழக ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான அன்புச் செழியன் வாங்கி இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் இப்போது அதில் இருந்து அவர் வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது.
Listen News!