• Sep 17 2024

ரஜனிக்கு போட்டியாக தனுஷ்... நடிகர் சண்டை ஒருபக்கம் குடும்ப சண்டை மறுபக்கம்... தனுஷின் அதிரடி முடிவு காலைவாருமா? கைகொடுக்குமா?

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் படங்களுக்கு பின்னணியில் பெரிய போர்கலமான நிறைந்திருக்கிறது. பொங்கல் ரிலீஸ் ரேஸில் நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படம்மும், சிவகார்த்திகேயனின் அயலான் படம்மும், ஐஸ்வர்யா ரஜனிகாந்த் இயக்கம் லால் ஸலாம் படம்மும் இருக்கின்றன.


முதலில் தீபாவளிக்கு ரிலீஸ் என முடிவு செய்திருந்த கேப்டன் மில்லர் திரைப்படம் பின்னர் பொங்கல் அன்று ரிலீஸ் செய்வதாக மாற்றப்பட்ட நிலையில் இதன் பின்னணியில் 2 காரணங்கள் இருப்பதாக கிசு கிசுக்கப்பட்டது. ஏற்கனவே நடிகர் தனுசுக்கும் , சிவர்த்திகேயனுக்கும் இடையில் பனி போர் என்ற நிலையில் சிவகார்த்திகேயனின் அவரின் மார்க்கெட்டை உடைக்க நடிகர் தனுஷ் ரிலீஸ் தேதியை மாற்றியதாக சொல்லப்படுகிறது.


இப்படி நடிகர்களுக்கு இடையிலான போர் ஒருபக்கம் என்றால், குடும்ப சண்டை மற்றோருபக்கம் தலைவிரித்தாடுகிறது. ஐஸ்வர்யாவுடன் விவாகரத்து என அறிவித்த தனுஷ் என்ன பிரச்சனை என்று பொது இடத்தில் பேசியது கூட கிடையாது. அதோ போல ஐஸ்வர்யாவும் அதனை பற்றி பெரிதாக பேசியது இல்லை. அவர்களின் மகன்களும் இருவரிடமும் மாறிமாறி கொஞ்ச நாட்கள் இருக்கின்றனர்.


ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் திரைப்படத்திற்கு போட்டியாக கேப்டன் மில்லர் திரைப்படத்தை ஒரே நாளில் வெளியிடுவதற்கு முக்கிய காரணம் ஜெயிலர் ரிலீஸ் தான் என கூறுகின்றனர் திரையுலகத்தினர். 


ஜெயிலர் படம் பார்க்க முதல் நாளே முதல் ஷோக்கு ரஜனியின் குடும்பத்தினர் வருகை தந்திருந்தனர். அதே நேரம் ஒரே தியேட்டரில் ஒரே படத்திற்கு ஒரே பேல்கனியில் தான் நடிகர் தனுஷும்  படம் பார்ப்பதற்காக ரோகிணி தியேட்டருக்கு வருகை தந்திருந்தார்.


திரைப்பட ரிலீசுக்கு முன் ஜெயிலர் படத்தை கேக் வெட்டி கொண்டாடும் போது ஒரு வார்த்தைக்கு கூட தனுஷை கூப்பிடாமல் கேக் வெட்டியது அவரை அவமானம் படுத்துவதற்கு சமம் என கருத்து தெரிவித்துள்ளனர் தனுஷ் தரப்பினர்.


படம் பார்த்து விட்டு வெளியில் வந்த தனுஷ் அப்போது ஏதும் சொல்லாமல் சென்று விட்டார் ஆனால் அவருக்கு மனதில் கவலை இருந்துள்ளது அதனால் தான் அவர் இப்பதி முடிவு எடுத்துள்ளார் என சினிமா வட்டாரங்கள் கதைத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement