• Apr 27 2024

ராஜ்குமார் பெரியசாமி இப்படிப்பட்டவரா? நமக்கு சரிப்பட்டு வராது.. ’நோ’ சொன்ன தனுஷ்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

ராஜ்குமார் பெரியசாமி தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’அமரன்’ என்ற படத்தை இயக்கி இருக்கும் நிலையில் இந்த படத்தை அடுத்து தனுஷ் படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவரைப் பற்றி சில விஷயங்களை கேள்விப்பட்ட தனுஷ் அவரது படத்திற்கு நோ சொல்லி விட்டதாக கூறப்படுகிறது. 

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்காக சிவகார்த்திகேயன் நடித்த ’அமரன்’ படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி முடித்து இருக்கிறார். இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக அவர் தனுஷ் உடன் ஒரு ஒன் லைன் கதையை கூறியதாகவும் இந்த கதையை கேட்ட தனுஷ் ஓகே சொல்லிவிட்டு ’இளையராஜா’ படத்தை முடித்தவுடன் நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம் என்று வாக்குறுதி அளித்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ’அமரன்’ படத்தை இயக்க ராஜ்குமார் பெரியசாமி கூறிய பட்ஜெட்டை விட தற்போது அதிகமாகி விட்டதாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தினர் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி குறிப்பிட்ட நேரத்தில் படத்தை முடிக்க வில்லை என்றும் இதனால் படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு செலவுகள் அதிகமானதாகவும் கூறப்படுகிறது. 

இதையெல்லாம் கேள்விப்பட்ட தனுஷ் ஏற்கனவே தான் நீண்ட லைன் அப் வைத்திருக்கும் நிலையில் இவரிடம் போய் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்து ராஜ்குமார் பெரியசாமி படத்திற்கு நோ சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. எனவே தனுஷ்-ராஜ்குமார் பெரியசாமி படம் டிராப் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும் ராஜ்குமார் பெரியசாமி கதை கூறிய விதம் தனுஷுக்கு பிடித்திருந்ததால் ஒரு சில நிபந்தனைகளுடன் அவர் தனது படத்தை இயக்க அனுமதிப்பார் என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement