• Sep 17 2024

மனைவியின் இயக்கத்தில் உருவாகி படுதோல்வியடைந்த படம்... சந்தோஷத்தில் தனுஷ்... ஓகோ இதுதான் விஷயமா....!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். நடிகர்களைப் பொறுத்தவகையில் ஒரு துறையில் மட்டும் கவனம் செலுத்தாது பல துறைகளிலும் கவனம் செலுத்துவது வழமை.

அந்த வகையில் தனுஷும் நடிகராக மட்டுமல்லாது திரைப்படத் தயாரிப்பாளர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர் எனப் பன்முகம் கொண்ட கலைஞராக விளங்கி வருகின்றார். 


மேலும் தனுஷ் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவின் கணவர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. எனினும் இவர்கள் இருவரும் தற்போது விவாகரத்துப் பெற்றுப் பிரிந்து விட்டார்கள்.


அந்தவகையில் ஐஸ்வர்யா தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமான படம் தான் '3'. இப்படத்தில் தனுஷ் நாயகனாக நடித்திருந்ததோடு அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். 


அதுமட்டுமல்லாது தற்போது தமிழ் சினிமாவில் டாப் இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானதும் இப்படத்தின் மூலம் தான். குறிப்பாக இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான "ஒய் திஸ் கொலவெறி..." என்ற பாடல் உலகளவில் வெளியாகி ஹிட் ஆனது.

இப்படம் வெளியாவதற்கு முன்னரே பாடல்கள் ஹிட் ஆனதால், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படமானது கடந்த 2011-ஆம் ஆண்டு ரிலீசானது. எனினும் படத்தின் திரைக்கதை சுமாராக இருந்ததன் காரணமாக இப்படம் வெளியானபோது கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடமிருந்து பெற்று படுதோல்வியை தழுவியது. 


இந்நிலையில் 2011 இல் வெளியாகி தோல்வியடைந்த அப்படத்துக்கு தற்போது திடீரென மவுசு அதிகரித்து உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இல்லை ஆந்திராவில் தான் இப்படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாம். 

அதாவது ஐஸ்வர்யா-தனுஷ் கூட்டணியில் உருவான '3' படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். அப்படி வெளியான இப்படத்துக்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறதாம்.

அதுமட்டுமல்லாது அங்கு இப்படத்தின் 200 இற்கும் அதிகமான காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆகி ஓடி உள்ளது பலருக்கும் நம்ப முடியாத அளவிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதனை அறிந்த நம்ம தனுஷ் மிகுந்த உற்சாகத்திலும், சந்தோஷத்திலும் உள்ளாராம். ஏனெனில் அவர் தெலுங்கில் முதன்முறையாக நடித்துள்ள 'வாத்தி' திரைப்படமும் படப்பிடிப்புகள் யாவும் முடிந்த நிலையில் விரைவில் ரிலீசாக இருக்கின்றது.


இந்நிலையில் 11 வருடங்களுக்கு முன் நடித்த '3' படத்துக்கே தெலுங்கில் இப்படி ஒரு அமோக வரவேற்பு கிடைத்தால், 'வாத்தி' படத்திற்கு இதைவிட டபுள் மடங்கு வரவேற்பும், வசூலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனுஷ் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement