• May 09 2024

தன்யாவின் ரகசிய திருமணத்தை அம்பலமாக்கிய நடிகை... அந்த வீடியோவை உடனே நீக்க சொன்ன தனுஷ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 'ஏழாம் அறிவு' என்ற படத்தின் மூலமமாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணா. 

மேலும் இவர் பாலாஜி மோகனின் 'காதலில் சொதப்புவது எப்படி' என்ற படத்திலும், அட்லி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான 'ராஜா ராணி' என்ற படத்திலும் நடித்திருந்தார். இதன் பின்னர் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற தன்யாவுக்கு அங்கு ஹீரோயின் வாயப்பு கிடைத்தது. 

இவ்வாறாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து வரும் தன்யா பாலகிருஷ்ணனும், தனுஷின் மாரி பட இயக்குநர் பாலாஜி மோகனும் கை விலங்குடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதனால் அவர்களுக்கு திருமணமாகிவிட்டதாக பரபரப்பாக பேசப்படுகிறது. 


இதனைத் தொடர்ந்து தன்யாவும், பாலாஜியும் திருமணம் செய்து கொண்டதில் ஆச்சரியம் இல்லை என்று திரையுலகை சேர்ந்த ஒரு சிலர் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் தெலுங்கு படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் கல்பிகா கணேஷ் என்பவர் தன்யா மற்றும் பாலாஜி மோகன் பற்றி பேசிய யூடியூப் வீடியோ வைரலானது. 

அதில் அவர் "லவ் ஃபெயிலியர் படத்தின் இயக்குநர் பாலாஜி மோகன் தான் தன்யாவின் புது கணவர். அவர்களுக்கு ரகசியமாக திருமணமாகிவிட்டது" என்றார். இருப்பினும் அந்த வீடியோ வைரலான வேகத்தில் அதை யூடியூப்பில் இருந்து உடனடியாக நீக்கிவிட்டார். 


இது குறித்துப் பேசுகையில் தன்யாவின் நண்பரான நடிகர் தனுஷ் தான் தன் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த வீடியோவை நீக்க வைத்துவிட்டார் என்கிறார் கல்பிகா. அதுமட்டுமல்லாது தன் வீடியோவை பார்த்துவிட்டு, தன்யா தனக்கு போன் செய்து மிரட்டியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சினிமாப் பிரபலங்களை பற்றி கல்பிகா ஏதாவது சர்ச்சையாக பேசுவது புதிதான ஒன்றல்ல. ஆனால் தன்யாவுக்கு எதிராக ஏன் பேசினார் என தெரியவில்லை. இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் தன்யாவுக்கு தனுஷ் எதற்காக உதவி செய்ய வேண்டும். அவர்களுக்கு இடையே எப்படி பழக்கம் ஏற்பட்டது. அந்த நட்பு பற்றி கல்பிகா கணேஷுக்கு எப்படி தெரிந்தது என தாறுமாறாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் தன்யா மிரட்டியதைத் தொடர்ந்து "உன்னால் முடிந்ததை பார் தன்யா" என கல்பிகா கூறியிருக்கிறார். இவ்வாறாக கல்பிகாவுக்கும், தன்யாவுக்கும் இடையே நடக்கும் பஞ்சாயத்துத் தான் தற்போது தெலுங்குத் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement