• May 19 2024

விக்ரம் வராமைக்கான உண்மைக் காரணம் இதுவா?… வெளியாகும் தகவல்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னம் அவர்களின் பல நாள் கனவாக இருந்து இன்று இவருடைய இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகியுள்ள திரைப்படம் தான் 'பொன்னியின் செல்வன்'. வரலாற்று சிறப்புமிக்க படமான இது இரண்டு பாகங்களாக உருவாகும் நிலையில், முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் திகதி பிரமாண்டமாக வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும் இப்படத்தில் பல திரைப்பிரபலங்களும் நடிக்கவுள்ளனர். அதில் நடிகர் விக்ரம் முதன்மை கதாபாத்திரமான ஆதித்த கரிகாலன் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கின்றார்.

இப்படத்தினுடைய டீசர் வெளியீட்டு விழா ஆனது கடந்த சில நாட்களுக்கு முன் பிரமாண்டமாக இடம்பெற்றிருந்தது. ஆனால் இவ்விழாவில் விக்ரம் கலந்து கொள்ளவில்லை. இதற்குக் காரணம் அந்த சமயத்தில் அவர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் ஓரிரு நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர் கடந்த 10-ஆம் திகதி உடல் நலம் குணமடைந்து வீடு திரும்பினார். எனினும் இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற 'கோப்ரா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றிருந்தார்.

இந்நிலையில் தற்போது ஒரு செய்தி வெளியாகி இருக்கின்றது. அதாவது 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற வேடத்தில் தான் விக்ரம் நடிக்கின்றார். ஆனால் அக்கதாபாத்திரம் படத்தில் வரும் நேரம் குறைவு என்பதன் காரணமாக மணிரத்னத்தின் மீது விக்ரம் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

மணிரத்னத்தின் மீதுள்ள கோபத்தின் காரணமாகத் தான் அவர் 'பொன்னியின் செல்வன்' படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள விரும்பவில்லை என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கின்றது. எனினும் இந்த செய்தி எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement