நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமா ரசிகர்களால் கியூட்டான நடிகையாக கொண்டாடப்படுபவர். கோயம்புத்தூர் பெண்ணான இவர் 2017ம் ஆண்டு வெளியான 'காதல் கண் கட்டுதே' என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.
இந்த படத்தினைத் தொடர்ந்து பின்னர் 'ஏமாளி' என்ற படத்தில் நடித்தார். சமீபத்தில் தான் படம் வெளியாகி இருந்தது. நாடோடிகள் 2, சுட்டு பிடிக்க உத்தரவு, என் பெயர் ஆனந்தன் போன்ற படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.
தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகின்ற இவர் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருபவர். அதில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.
அந்த வகையில் இவர் தற்போதும் வெள்ளை நிற உடையணிந்து தேவதை போல் காட்சி அளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார். அப்புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Listen News!