• May 05 2024

தீபிகா படுகோன் தனது கணவர் ரன்வீர் சிங்கை விவாவகரத்து செய்யப் போகின்றாராம்- காட்டுத் தீயாய்ப் பரவும் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் பிரபல்யமான நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் தான் நடிகர் ரன்பீர் சிங் மற்றும் தீபிகா படுகோன். 6 வருடங்களுக்கு மேலாக காதலித்து  வந்த இவர்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக தீபிகா படுகோனேவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் ரன்பீர் சிங்குக்கும் தீபிகா படுகோனே விற்கும் இடையே தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக ஒரு தகவல் காட்டுதீ போல் பரவி வருகிறது.


கடந்த 2 மாதங்களாகவே தீபிகாவும், ரன்பீரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், தீபிகா ரன்பீரை விட அதிக அளவில் சம்பாதிப்பதால் தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்தோடு சமீபத்தில் ரன்பீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் வெளியாகி சர்ச்சையான போது தீபிகா படுகோனேவும் சேர்ந்து விமர்சிக்கப்பட்டார்.

 இது பிரிவுக்கு மற்றொரு காரணமாக கூறப்படுகிறது. மேலும் ரன்பீரும், தீபிகாவும் விவாகரத்து பெற்று பிரியப்போவதாக இணையத்தில் தகவல்கள் பரவி வரும் நிலையில், இருவர் தரப்பில் இருந்தும் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Advertisement

Advertisement