• May 04 2024

சிவகாமியை மீறி சரவணன் அப்பா எடுத்த முடிவு.. ராஜா ராணி -2 எபிசோட் அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல ருவிஸ்டுகளுடன் நகரும் சீரியல் தான் ராஜா ராணி-2.இந்த சீரியலுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கின்றது என்பதை பார்ப்போம்…

சிவகாமி காலையில் எழுந்து அமர்ந்து கொண்டிருக்க அந்த நேரத்தில் அந்த சரவணன் அப்பா சரவணன் சந்தியா இந்த குடும்பத்துக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள், அவர்களின் உழைப்பில் சுகம் கண்ட நாம அவர்களுக்கு என்ன செய்திருக்கிறோம் .அவர்களை சந்தோஷத்தை கூட நிறைவேற்ற கூடாதா? கடைசி வரைக்கும் சரவணன் இந்த குடும்பத்துக்காக உழைத்து சாக வேண்டும் என ஏதாவது எழுதி இருக்கா? என்ன சிவகாமியிடம் ஆவேசமாக பேசி முதல் முறையா ஒரு முடிவு எடுத்து இருக்கேன் என சொல்லி சரவணன் சந்தியாவை வீட்டுக்குள் அழைக்கிறார்.

இருவரும் தயக்கத்துடன் வேண்டாம் வேண்டாம் என சொல்ல அவர்களை உள்ளே அழைத்து வருகிறார்.

இதன் பிறகு சரவணன் சிவகாமியிடம் உங்ககிட்ட உண்மைய சொல்லுவம் என சந்தியா ஆரம்பத்தில் இருந்து சொல்லிக்கிட்டு தான் இருந்தாங்க .நான் தான் உங்களுக்கு பயந்து அப்புறம் சொல்லலாம் அப்புறம் சொல்லலாம் என தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன். உங்ககிட்ட மறைக்க வேண்டும் என்று நினைக்கவல்லை. நீங்க கோபப்படுவீங்க என்று தான் பயந்தேன் என சொல்கிறார்.

பிறகு சந்தியா உங்க பையன் நைட் எல்லாம் தூங்கவே இல்லை. உங்கள நினைச்சு தான் புலம்பிக்கொண்டே இருந்தாரு .உங்க இரண்டு பேருக்கும் இந்த இடைவெளி வந்திடக் கூடாது என்று தான் என்னைக்கும் நினைச்சிருக்கேன் அவர ஏத்துக்கங்க எப்பவும் போல அவர்கிட்ட பேசுங்க.

மேலும் நாங்க செஞ்சது தப்புதான் சின்ன தப்போ பெரிய தப்போ உங்களை கஷ்டப்படுத்தி இருக்கோம் மன்னிச்சிடுங்க என இருவரும் காலில் விழுந்து அழுகின்றனர். ஆனால் சிவகாமி பதில் ஏதும் பேசாமல் அப்படியே அமைதியாகவே சிலை போல நிற்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement