• Apr 20 2026

அடையாளங்களை அழித்த பார்த்திபன்... நடிகரின் முடிவிற்கு நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனித்துவமான படைப்புகளால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் பார்த்திபன். தனது முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அவர், பின்னர் இயக்கிய ஒவ்வொரு படத்திலும் புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். வித்தியாசமான கதைக்களம், சினிமா மொழியில் புதிய சோதனைகள் ஆகியவற்றின் மூலம் அவர் தனி பாதையை உருவாக்கினார். சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாதபோதிலும், தனது முயற்சிகளை ஒருபோதும் கைவிடாமல் தொடர்ந்து முன்னேறினார்.


இந்நிலையில், கடந்த மாதம் ஆந்திரப் பிரதேசம் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் சாதி தொடர்பாக பேசிய கருத்துகள் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தின. அந்த உரை சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பல்வேறு விமர்சனங்களையும் விவாதங்களையும் கிளப்பியது.

இந்த சூழலில், பார்த்திபனுக்கு “சாதி, மதமற்றவர்” என்ற சான்றிதழை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அவரது நீண்டநாள் எண்ணத்தை பிரதிபலிக்கும் முடிவாக பார்க்கப்படுகிறது.

இந்த தீர்ப்பால் பார்த்திபன் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். சமூகத்தில் சமத்துவம் மற்றும் மனிதநேயத்தை வலியுறுத்தும் அவரது நிலைப்பாட்டுக்கு இது ஒரு முக்கிய அங்கீகாரமாகவும் பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement