• May 13 2024

சர்ச்சையில் சிக்கிய ஜீ தமிழ் பேரன்பு சீரியல் சீன்-நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தற்போதைய காலகட்டத்தில் சின்னத்திரை ரசிகர்களை கவர்வதற்காக டிவி சேனல்கள் அனைத்தும் போட்டிபோட்டுகொண்டு புதுப்புது சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என எல்லா முன்னணி சேனல்களிலும் காலை முதல் இரவு வரை சீரியல்கள் ஒளிப்பரப்பாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக இந்த சேனல்களில் ஒளிப்பரப்பப்படும் சீரியல்கள் டி.ஆர்.பி ரேட்டில் ஜெயிக்க போட்டிபோட்டு கொண்டு டெலிகாஸ்ட் ஆகி வருகின்றன. அந்த வரிசையில் ஜீ தமிழில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சீரியல் தான் 'பேரன்பு'.

இந்த சீரியல் தற்போது ரசிகர்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றது.இதில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் தங்கை ரோலில் நடித்து வரும் வைஷ்ணவி தான் பேரன்பு தொடரில் கதாநாயகியாக நடிக்கிறார். காநாயகனாக விஜய் வெங்கடேசன் நடிக்கிறார்.ஆதரவற்ற பெண்ணான கதாநாயகி, கதாநாயகனிற்கு அவரது அம்மா கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கிறார். தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் அம்மாவிற்காக திருமணம் செய்துகொள்கிறார் சீரியல் கதாநாயகன்.

தற்போதைய அப்டேட்டின் படி, கார்த்திக்கும் வானதிக்கும் கல்யாணம் நடந்துவிட்டது. ஆனால் கதாநாயகன் கார்த்திக் இதுவரை வானதியை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் மாமியாருக்கும் மிகவும் பிடித்த மருமகளாக வானதி வீட்டை சுற்றி வருகிறார்.

மேலும் இப்படி இருக்கையில் இந்த சீரியலில் சில தினங்களுக்கு முன்பு டெலிகாஸ்ட் ஆன சீன் நெட்டிசன்களால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றது. வானதியும், ராஜேஸ்வரி குடும்பத்துக்கு அடுத்த மருமகளாக வரப்போகும் பெண்ணும் ஸ்கூட்டியில் வெளியே செல்கின்றனர்.

அப்போது ரோட்டில் இருக்கும் சில ரவுடிகள் அந்த பெண்ணை கிண்டல் செய்கின்றனர். இதனால் கோபமடைந்த அந்த பெண் போலீஸுக்கு ஃபோன் செய்கிறார். எனினும் அதற்குள் அவர்கள் பயந்து ஓடி விடுகின்றனர். இந்த சீன் முடிந்தது கதாநாயகி வானதி, அந்த பெண்ணுக்கு அட்வைஸ் செய்கிறார். அதாவது அந்த பெண் ஆபசமாக உடை அணிந்ததால் தான் அந்த ரவுடிகள் கிண்டல் செய்ததாகவும் கல்யாணம் ஆக போற பெண் இப்படியெல்லாம் உடை அணிய கூடாது என்றும் அவர் சொல்கிறார்.

மேலும் அந்த சீனில் இருவருமே புடவை தான் கட்டி இருப்பார்கள். ஆனால் கேலிக்கு உள்ளான பெண், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து இருப்பார். இதை தான் ஆபசம் என்று வானதி கூறி இருப்பார். பெண்கள் அணியும் உடையை பொறுத்து தான் ஆண்கள் அவர்களை கேலி கிண்டம் செய்வதாக அவர் கூறும் கருத்துக்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளது.அதுமட்டுமில்லை பாடகி சின்மயியும் இந்த சீசனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து சுட்டிக்காட்டியுள்ளார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement