• May 19 2024

தொகுப்பாளினி பாவனாவுக்கு கிடைத்த விஷேட சலுகை-சூப்பரான விஷயமாச்சே- குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்றைய தினம் செ்னையில் பிரமாண்டமாக ஆரமடபிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

இன்றிலிருந்து அடுத்த மாதம் 10ம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் தன் மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டார். மேலும், கவிஞர் வைரமுத்து, நடிகர் கார்த்தி, அரசியல் தலைவர்கள் என பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தவிழாவில் நடிகர் கமல்ஹாசனின் பின்னணி குரலில் தமிழ்நாட்டின் கலாசார வளர்ச்சி குறித்த நிகழ்த்துக்கலை நடைபெற்றது. அத்தோடு இநடத நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க தொகுப்பாளினி பாவனாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து அவர் பதிவிட்டதாவது இந்த மதிப்புமிக்க நிகழ்வை என்னால் தனியாக நடத்த முடியும் என்ற நம்பிக்கை மற்றும் நம்பிக்கைக்காக மேடையில் என்னை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை அனுமதிப்பது
மொழிகளை மாற்ற, கடினமான சூழ்நிலைகளை கையாள எனக்கு சவால் விடுகிறேன்எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமையை எனக்கு அளித்தமைக்கு நன்றி என்றும் பதிவிட்டுள்ளார் என்பதும் முக்கியமாகும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement