• May 11 2024

சினிமாவில் 19வது ஆண்டினைப் பூர்த்தி செய்த நடிகர் ஜெயம் ரவி- குவியும் பாராட்டுக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்குபவர்களில் ஒருவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் 2003 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து மழை எம். குமரன் பேராண்மை, தனி ஒருவன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இவர் நடிப்பில் இறுதியாக பூமி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனையடுத்து இப்போது அகிலன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சினிமாவில் அறிமுகமாகி 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஜெயம் ரவிக்கு வாழ்த்து தெரிவித்து ‘அகிலன்’ படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் தனது 19 ஆண்டுகால திரைப்பயணத்தை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜெயம் ரவி. அதில் “எல்லாம் நேற்று நடந்தது போல இருக்கிறது. என்னுடைய முதல் படமான ஜெயம் படத்துக்காக கேமராவை எதிர்கொண்டது நினைவிருக்கிறது.

இது ஒரு மேஜிக் போல உள்ளது. என்னுடைய திரை பயணத்தின் பின்னணியில் படைப்பாளிகள் மற்றும் வித்தகர்கள் பலர் உள்ளனர்.எனது ரசிகர்களின் அன்பும் ஆதரவும் எனது திறமையை வளர்த்ததோடு மட்டும் இல்லாமல், சிறந்த படைப்புகளை வழங்குவதில் நிறைய பொறுப்புகளை வழங்கியுள்ளன” எனக் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement