• May 10 2024

நடிகை சன்னிலியோனை கண்டு கொள்ளாத நிறுவனங்கள்- மன அழுத்தத்தை தாங்க முடியாமல் என்ன செய்தார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக கலக்கி வருபவர் தான் சன்னிலியோன். கிளாமர் நடிகையாக வலம் வரும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அத்தோடு தற்பொழுது தமிழில் நடிகர் சதீஷுடன் இணைந்து ஓர் பேய் படத்தில் நடித்து வருகின்றார்.

இவருக்கு திருமணம் முடிந்து மூன்று பிள்ளைகள் இருப்பினும் தனது அழகினை குறைய விடாமல் பராமரித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் அண்மையில் ஓர் பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். அதைக் கேட்ட ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளதோடு சன்னி லியோனுக்கே இப்படியொரு நிலைமையா என கேட்டு வருகின்றனர்.

அதாவது இவர் பாலிவூட்டில் என்ன தான் டாப் நடிகையாக இருந்தாலும் ஒரு ஆடை நிறுவனம் கூட அவருக்கு டிரெஸ் கொடுத்து தங்களது விளம்பர படங்களில் நடிக்க அழைக்கவில்லையாம். அதே போலதான் மேக்கப் நிறுவனங்களும் இப்படியொரு ஒரு சில காரணங்களுக்காக இவரை கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டு விட்டது இவருக்கு ரொம்பவே மன அழுத்தத்தை கொடுத்துள்ளது.

இதனால் தற்போது சொந்த நிறுவனத்தை தொடங்கி ஆடை மற்றும் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் முடிவுக்கு சன்னி லியோன் வந்து விட்டதாக தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில், கிம் கர்தாஷியன், கைலி ஜென்னர் உள்ளிட்ட பலரும் இதே போன்ற பிசினஸை செய்து தான் கொடிகட்டி பறக்கின்றனர். இந்தியாவிலும் கத்ரீனா கைஃப் தனது அழகு சாதன நிறுவனத்தை ஆரம்பித்து நயன்தாராவை எல்லாம் விளம்பரத்தில் நடிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement