• Apr 27 2024

விரைவில் வெளியாகும் வின்னர் 2- அப்போ வடிவேலுவும் வருவரா? -செம சந்தோஷத்தில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் பிரசாந்த். இவர் 90s காலத்தில் முன்னணி நடிகராக வலம்வந்தவர்.இவருடைய முதல் படமே ஹிட்டானதால் பல டைரக்டர்களும் இவருக்கு தேடி வந்து வாய்ப்பு கொடுத்தனர்.

இவர் நடிப்பில் வெளிவந்த ஜோடி, பிரியாத வரம் வேண்டும்,திருடா திருடி என பல படங்கள் ரசிகர்களின் மிக வரவேற்பு பெற்ற படங்களாகும். இவ்வாறு சினிமாவில் பெண்களின் கனவு நாயகனாக கலக்கி வந்த பிரசாந்த் சினிமாவில் இருந்து விலகி தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் தனது தந்தை இயக்கி தயாரிக்கும் அந்தகன் படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் சென்றுள்ளார் நடிகர் பிரசாந்த்.அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர் "விரைவில் அந்தகன் ரிலீஸாக உள்ளது. தொடர்ந்து வின்னர் படத்தின் 2-ஆம் பாகம் முதல் பாகத்தை விட பிரமாண்டமாக வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இது தவிர ரசிகர்கள் எப்போதும் என்மீது அன்பு வைத்துள்ளனர். அவருக்கு நன்றி கடன் பட்டுள்ளேன்' என்று தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளதோடு வடிவேலுவும் உங்களோடு சேர்ந்து நடிப்பாரா எனக் கேட்டு வருவதையும் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement