• May 07 2024

நடிகர் அதர்வா தனது அப்பாவான முரளியுடன் சிறுவயதில் எடுத்த புகைப்படம்-இதுவரை யாரும் பார்த்திடாத போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் பிரபல்யமான நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் முரளி. இவர் பூவிலங்கு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகிய பூ வாசம், இதயம், ஆனந்தம், பாச கிளிகள் போன்ற இன்னும் பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.

இவ்வாறு தமிழில் உச்சந் தொட்ட நடிகராக இருந்த இவர் இறுதியாக தனது மகனான அதர்வா நடிப்பில் வெளியான பானா காத்தாடி திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

இதன்பின், மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்தார். இவர் மரணமடைந்ததைத் தொடர்ந்த இவரது மகனான அதர்வா பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

இந்நிலையில், நடிகர் முரளி தனது மகன் சிறு வயதில் இருக்கும் போது இருவரும் அழகாய் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement