• May 04 2024

யார் கூட யாரை கோர்த்து விடப் பார்க்கிறீங்க... திடீர் கேள்விக்கு சென்ட்ராயன் சொன்ன அசத்தலான பதில்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வரும் விடயம் என்றால் அது நடிகர் சென்ட்ராயன் மற்றும் தயாரிப்பாளர் கே. ராஜனுக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் தான். அதாவது 'லோக்கல் சரக்கு' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் தான் இந்த வாக்குவாதம் ஏற்பட்டு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


அதாவது சமீபகாலமாகவே சினிமா விழாக்களில் கலந்து கொண்டு பேசினாலே சர்ச்சையை கிளப்ப வேண்டும் என முன்னணி நடிகர்களையும் இயக்குநர்களையும் விளாசி வருகிறார் கே. ராஜன். அந்தவகையில் லோக்கல் சரக்கு படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. 

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் கே. ராஜன், இந்த படத்தின் வாயிலாக தயாரிப்பாளராக மாறியுள்ள இசையமைப்பாளர் வி.ஆர். சுவாமிநாதன் ராஜேஷ் ஐப் பார்த்து "நீங்க இனிமேல் படம் தயாரிக்கக் கூடாது" என பேச அதற்கு குறுக்கிட்டு நடிகர் சென்ட்ராயன் பேசிய விடயமும் சர்ச்சையை கிளப்பியது.


இது தொடர்பாக சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் அவரிடம் இது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. 

அந்த வகையில் நடிகர் சென்ட்ராயன் இதற்கு பதிலளிக்கையில் "அந்த வார்த்தை ரொம்ப தப்பான வார்த்தை, படம் எடுக்க வராதீங்க, படம் எடுக்க வராதீங்க என்றால் அப்போ நான் எல்லாம் எதுக்கு சேர்? 20 வருஷம் நான் இதுக்காக கஷ்டப்பட்டு இருக்கேன், இதை விட்டிட்டு நான்  வேற எந்த வேலைக்கு போவான்?

எப்பிடி என்னால வாழ முடியும்? எனக்கு வேற வேலையே தெரியாது. சினிமா தான் எனக்கு எல்லாமே. செத்தாலும் சினிமா தான் எனக்கு வேணும், அவர் மூலமாக தான் எனக்கு வேலையே வருது" என மிகவும் உருக்கமாக பேசியிருக்கின்றார்.


அதுமட்டுமல்லாது "தயாரிப்பாளர் ராஜன் பேசும்போது நடுவில பொறுக்கி என்டீங்களே அது எதுக்காக..? "பணம் போட்டவனுக்கு தானே வலிக்கணும், பணம் போடாத உங்களுக்கு எல்லாம் எதுக்கு வலிக்கணும் எனவும் அந்த பேட்டியில் சென்ட்ராயனிடம் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளிக்கையில் "எங்களுக்கு என்று ஒரு பொறுப்பு இருக்கு, அதை தான் நான் செய்கிறேன், ராஜன் சார் தப்பானவர் இல்லை, ஆனால் அவர் சொன்ன அந்த வார்த்தை ரொம்ப தப்பான வார்த்தை" எனக் கூறியிருக்கின்றார்.

மேலும் "மேடையில் உங்களுக்கு மைக் தர மறுத்திட்டாஙகளே அது எதுக்கு? எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு "டைம் இல்லை அதுதான் காரணம் வேறு எதுவுமில்லை, அதாவது தியேட்ட்ருடைய டைம் இல்லை அது தான்" எனப் பதிலளித்திருக்கின்றார்.


அடுத்ததாக இறுதிக் கேள்வியாக அவரிடம் "அப்போ பெரிய நடிகர்கள் தான் நிறைய காசு வாங்கிட்டு இருக்காங்க, அதனால தான் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைகிறார்கள், சின்ன நடிகர்கள் எல்லாம் அப்படி இல்லை, அப்படித்தானே" என்று கேட்டிருந்தார்கள்.

அதற்கு "நீங்க யாரு, எப்படி ஆனவங்க என்று எனக்குத் தெரியும், யார் கூட கோர்த்து விடப் பாக்கிறீங்க" என செம ஜாலியாக சிரிச்சுகிட்டே பதிலளித்திருக்கின்றார் நடிகர் சென்ட்ராயன்.  

Advertisement

Advertisement

Advertisement