தமிழ் சின்னத்திரையில் போட்டி போட்டு சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.அந்தவகையில் ஜீ தமிழ் சீரியலில் அடுத்தடுத்து புதிய சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.
இவ்வாறுஇருக்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது மாரி சீரியல்.ஜீ தெலுங்கில் ஒளிபரப்பாகி வந்த சீரியலின் ரீமேக்காக அமைந்துள்ள இந்த சீரியலில், தெலுங்கில் நடித்த நடிகை ஆஷிகாவே தமிழிலும் நாயகியாக நடித்துள்ளார்.
குறுகிய நாட்களில் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஆஷிகாவுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆஷிகா தமிழில் சன்டிவியில் ஒளிபரப்பான தமிழ்ச்செல்வி என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர்.
எனினும் அனைத் தொடர்ந்து தெலுங்கு கன்னட மொழிகளில் பல சீரியல்களில் நடித்த அவர் தற்போது மாரி சீரியல் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை ஆஷிகா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
அத்தோடு அந்த வகையில் இவர் இன்ஷ்டாகிராமில் வெளியிடும் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வரும் நிலையில், அவரின் சமீபத்தில் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
அதாவது சீரியலில் பாரம்பரிய உடையான சேலையில் காட்சியளிக்கும் ஆஷிகா தற்போர் மாடர்ன் உடையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை கலக்கி வருகிறது.
Listen News!