தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் நடித்து பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர் தான் இலியானா. தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தைத் தொடர்ந்து தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் தெலுங்கு சினிமாவிற்கே சென்று விட்டார். இப்போது தெலுங்கிலும் படவாய்ப்புக்கள் குறைந்ததால் கவர்ச்சிப் போட்டோ ஷுட் நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.
மேலும் இவரும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த போட்டோகிராபர் அண்ட்ரூ நிபோனும் காதலித்தனர். பிறகு காதலில் முறிவு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். காதல் முறிவு வலியில் இருந்து மீண்டது குறித்து இலியானா அளித்த பேட்டியில், "காதல் முறிவு வேதனையில் இருந்து மீள்வதற்கான சிகிச்சைக்கு சென்றபோது மனநல ஆலோசகர் என்னிடம் உனக்குள் உள்ள சிறப்பு அம்சங்களின் மீது கவனத்தை செலுத்து என்று சொன்னார்,
நான் அதையே கடைப்பிடித்தேன். குடும்ப உறுப்பினர்கள், சினேகிதர்களின் மதிப்பை தெரிந்து கொண்டேன். நான் மன அழுத்தத்தில் இருந்தபோது அதில் இருந்து வெளியே வருவதற்காக எனக்கு அவர்கள் தான் ஆதரவாக நின்றார்கள். இப்போது எத்தனை பேர் விமர்சனம் செய்தாலும் நான் கண்டு கொள்வதே இல்லை. ஏனென்றால் என்னை நான் நேசிக்கிறேன். காதல் முறிவு ஒரு வேதனை அல்ல. அது ஒரு வரம். நம்மை நாம் புரிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பு. அந்த நிலையில் என் வாழ்க்கையில் எத்தனையோ பாடங்களை கற்றுக்கொண்டேன். எனவே காதல் முறிவு என்பது என் வாழ்க்கையில் நடந்த ஒரு நல்ல சம்பவம்'' என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்
- கமல் சார் மாதிரி பேசுங்க- மித்திரன் சொன்ன வார்த்தையைக் கேட்டு கடுப்பான கார்த்தி
- நாளைய தினம் தாயகம் திரும்பவுள்ள டி .ராஜேந்தர்-விமான நிலையத்தில் வரவேற்கப் போவது யார் தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!