• May 05 2024

தீவிரவாதிகளை அடக்க பாரதி போட்ட மாஸ்டர் பிளான்- ரெஸ்ட் ரூம் போன பெண்ணுக்கு ஏற்பட்ட ஆபத்து

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிகட கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. அந்த வகையில் இந்த சீரியலில் என்ன நடந்துள்ளது என்று பார்ப்போம்.

தீவிரவாதிகள் அனைவருக்கும் சாப்பாடு கொடுத்து சாப்பிடுவதற்கு பத்து நிமிடம் தான் டைம் அதற்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும் அதன் பிறகு இந்த சாப்பாட்டையும் தண்ணீர் பாட்டில் வைத்திருக்க முடியாது.


பிறகு மீண்டும் நாங்கள் எப்போது சாப்பாடு தருகிறோமோ அப்போதுதான் சாப்பிட முடியும் அதுவரைக்கும் நீங்கள் பட்டினியாக தான் கிடக்க வேண்டும் என சொல்ல எல்லோரும் சாப்பிட தொடங்குகின்றனர். கண்ணம்மா லக்ஷ்மிக்கு ஊட்டி விட பாரதி சாப்பிடாமல் இருக்க அகிலன் சாப்பிடு நாளைக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் அதற்கு உனக்குள் தெம்பு இருக்க வேண்டும் என சொல்ல பாரதியும் சாப்பிட தொடங்குகிறார். பிறகு லட்சுமி பாரதியை சாப்பாடு ஊட்டி விட சொல்லி ஊட்டிக் கொள்கிறார்.

அடுத்து பாரதியுடன் இருந்த ஆபிஸர் குறித்து விசாரிக்க பாரதி அவர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற விஷயத்தை சொல்ல அனைவரும் கண் கலங்குகின்றனர். பிறகு லட்சுமி பாரதி மீது படுத்து தூங்க அதன் பிறகு பாரதி தீவிரவாதியை சந்தித்து ஆப்பரேஷன் செய்ய சில மெடிசன்கள் வேண்டும் என கூறுகிறார். இதில் தீவிரவாதிகளுக்கு எதிராக அவர் சூழ்ச்சி செய்ய சில மெடிசன்களை வரவைக்க உள்ளார்.


அடுத்ததாக ஒருவர் ரெஸ்ட் ரூம் போக வேண்டும் என சொல்ல தனியாக அனுப்ப முடியாது என சொல்லி தீவிரவாதியில் ஒரு ஆண் ஒருவர் கூட செல்ல பாத்ரூமுக்குள் என்ன நடந்தது என தெரியவில்லை அந்த பெண்ணை அழுது கொண்டே வெளியே ஓடி வருகிறார். இதை இன்னொரு பெண் தீவிரவாதி பார்த்துவிட்டு நீ செய்தது ரொம்ப தப்பு என நான் தீவிரவாதியிடம் சொல்ல நீ பார்த்தது வெளியில் சொல்லாத வரைக்கும் உனக்கு நல்லது என கூறுகிறார். தீவிரவாதியின் முகத்தைப் பார்த்து பாரதி தவறு நடந்திருப்பதை கண்டுபிடிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement

Advertisement