• May 06 2024

எதிர்பாராத டுவிஸ்ட்டுடன் 'பாரதி கண்ணம்மா 2'... அட இவங்க இதில டபுள் act ஆ..? அது எப்படி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சீரியலுக்குப் பேர் போன தொலைக்காட்சி சேனல் என்றால் அது விஜய் டிவி தான். இதில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுமே மக்கள் மத்தியில் பேர் போனவை. அதிலும் சீரியலுக்கு என்று ஒரு கூட்டமே இருந்து வருகின்றது. அவ்வாறு மக்கள் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக 'பாரதி கண்ணம்மா' சீரியல் திகழ்ந்து வருகின்றது.


இந்த சீரியலானது சமீபத்தில் தான் முடிவடைந்தது. இதன் கிளைமாக்ஸ் காட்சியில் கண்ணம்மா கழுத்தில் தாலியை பாரதி காட்டுவார் அத்தோடு தொடரும் என பாரதி கண்ணம்மாவின் முதல் பாகம் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீசன் 2 கடந்த 4 ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு அதன் ப்ரோமோவும் விஜய் தொலைக்காட்சியின் சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிடப்பட்டது. 

முதல் பாகத்தில் இருந்த எதிர்பார்ப்பை விட இதன் 2-ஆம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதாவது இதன் 2-ஆம் பாகத்தில் பழைய பாரதிக்கு பதிலாக ரோஜா சீரியல் நாயகன் சிபு சூர்யன் நடிப்பதாகவும் கண்ணம்மாவாக பாகம் ஒன்றில் நடித்த வினுஷா தேவியே தொடரப் போகிறார் கூறியுள்ளனர். 


இந்நிலையில் 'பாரதி கண்ணம்மா' சீரியலின் 2-ஆம் பாகத்தின் கதை பற்றிய தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் படு வைராலகி வருகிறது. அதாவது கடந்த ப்ரோமோவில் காட்டப்பட்டது போலவே கதாநாயகன் பாரதி பெரிய பணக்கார வீட்டு பிள்ளையாக இருக்கின்றார். இருப்பினும் இவருடைய தந்தை சிறுவயதிலேயே இறந்து விட்டார். 

இவ்வாறிருக்கையில் பாரதியின் உடைய 25-ஆவது பிறந்தநாளை கொண்டாட ஊரில் உள்ள பெரியவர்கள் இவரின் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். அப்படி இருக்க பாரதி காலையிலேயே மது அருந்தி விட்டு குடிபோதையில் ஊர்மக்களை காண வருகிறார். ஏற்கனவே பாரதியின் உடைய தந்தை இறந்த நிலையில் தற்போது பாரதியும் இப்படி இருப்பதை பார்த்து ரொம்பவே வருத்தமடைகிறார் பாரதியின் தாய்.


ஒருபுறம் சீரியலின் கதாநாயகனான பாரதி இப்படி இருக்கின்றார். மறுபுறம் சீரியலின் கதாநாயகி மத்திய சிறைச்சாலையில் இருந்து வெளியில் வருகிறார். ஆனால் இதில் இவரின் பெயர் கண்ணம்மா கிடையாது சித்ரா. இவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறையில் கஞ்சா விற்ற ஒருவரை காட்டி கொடுத்தின் மூலம் இவரின் நல்ல குணத்திற்காக இவரை வெளியில் அனுப்புகின்றனர். 

ஆனால் சிறையில் மாட்டிக்கொண்ட அந்த பெண் சித்ராவை கொலை செய்ய வெளியில் அடியாட்களை தயார் செய்து வைக்கிறார். இவ்வாறு அந்த மத்திய சிறையில் இருந்து வெளியில் வரும் சித்ரா ஒரு பேருந்தில் ஏறுகிறார். அங்கேதான் ஒரு பெரிய ட்விட்ஸ்ட் நடக்கிறது.

அதாவது சித்ரா வந்து அமர்ந்த அதே இடத்தில் அவருக்கு பக்கத்து சீட்டில் கண்ணம்மா அமருகிறார். இப்படி இருவரும் அருகில் இருக்க ஒருவர்க்கொருவர் தங்கள் வாழ்க்கையில் நடந்த பலவற்றையும் பரிமாறிக்கொள்ளும் நிலையில் கஞ்சா விற்ற பெண்ணுடைய அடியாட்கள் உடனே கண்ணம்மாவை கொலை செய்து விடுகின்றனர். இதனால் சித்ரா தான் பின்னர் கண்ணம்மாவாக மாறுகிறார். இப்படித்தான் பாரதி கண்ணம்மா சீசன் 2வின் கதை செல்ல இருக்கிறது என்று தற்போது தகவல் கிடைத்துள்ளது.


இவ்வாறு பாரதி கண்ணம்மா சீரியல் 2வில் பல டுவிஸ்ட்டுகள் நிறைந்து இருப்பதால் இந்த சீரியல் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement