• May 07 2024

சிங்கிளாக இருப்பது போர் அடிக்குது- இரத்தத்தில் எழுதி கூட லெட்டர் வரும்- ஓபனாகப் பேசிய ஷெரின்

stella / 10 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் நடிகை ஷெரினா.. முதல் படத்திலேயே நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இவர் தொடர்ந்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் ஆகிய படங்களில் நடித்து பிரபல்யமானார்.

பின்னர் படவாய்ப்புக்கள் குறைவடைந்ததை அடுத்து நீண்ட காலங்கள் கழித்து பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டார். தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். இதனிடையே பிரபல யூடியூப் சேனலுக்கு ஷெரின் அளித்துள்ள பேட்டியில் தான் சினிமாவில் ரசித்துக் கொண்டிருந்தபோது தனக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்ததாகவும் சில நேரங்களில் ரத்தத்தில்கூட தனக்கு கடிதங்கள் வரும் என்றும் ஷெரின் தெரிவித்துள்ளார். 


தற்போது விஜய் டிவியின் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் தனக்கு மீண்டும் ரசிகர்களை கொடுத்துள்ளதாகவும் பெண் ரசிகர்களும் தனக்கு அதிகமான அளவில் உள்ளதாகவும் ஷெரின் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடைய வாழ்க்கையை தான் பிளான் செய்யாமல் ஓட்டுவதால் சிறப்பாக போவதாகவும் தெரிவித்துள்ளார். 

தன்னுடைய பிரேக் அப்பிற்கு பிறகு 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது திருமணம் செய்துக் கொள்ளும் ஆசை ஏற்பட்டுள்ளதாகவும் ரசிகர்களிடம் இருந்தும் அதிகமான ப்ரபோசல்கள் வருவதாகவும் ஷெரின் தெரிவித்துள்ளார். மேலும் சிங்கிளாக இருப்பது போர் அடிப்பதாகவும் ஷெரின் மேலும் கூறியுள்ளார். விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


ஒரு கட்டத்தில் தனக்கு அதிகமான படங்களில் நடிப்பதில் இருந்த ஆர்வம் குறைந்துவிட்டதாகவும் தனக்கு நிம்மதி கிடைக்காத சினிமாவில் நடிப்பதை தான் நிறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனக்கு பிடிக்காத விஷயங்களை தான் செய்வதில்லை என்றும் அதனால்தான் 8 வருடங்கள் இணைந்திருந்த தன்னுடைய காதலருடன் மனக்கசப்பு ஏற்பட்ட போது தான் பிரிந்துவிட்டதாகவும் அவர் பகிர்ந்துள்ளார். தற்போதுவரை தான் சிங்கிளாகத்தான் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement