• May 06 2024

உங்களால் நான் மூன்று தடவை தவறு செய்து விட்டேன்- குயின்சி பேசியது பிடிக்காமல் கோபப்பட்ட அசீம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்வியானது சூப்பர் ஹிட்டாகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொணடடிருக்கின்றது. அதிலும் தற்பொழுது கொடக்கப்பட்ட பொம்மை டாஸ்கினால் போட்டியாளர்கள் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த டாஸ்கில் ஏற்கனவே தள்ளுப்பட்ட வேளையில் ஷெரினா, தனலட்சுமி உட்பட அனைவரும் கீழே விழுந்தனர். இதில் ஷெரினாவுக்கு பலத்த காயம் ஏற்பட்ட மருத்துவ முதலுதவிக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த விஷயத்தில் தனலட்சுமி தான் ஷெரினாவை தள்ளிவிட்டதாக அசீம் குற்றம்சாட்டி வந்தார்.  


இந்த வார இறுதியில் குறும்படம் வெளியிட்டு இதிலிருக்கும் உண்மை நிரூபிக்கப்படும் என்று தனலட்சுமியும் கூறிவந்தார்.அப்போது அசீம், தனலட்சுமியை நோக்கி, “நீயெல்லாம் ஒரு பெண்ணா..?” என்று ஆவேசமாக கேட்ட அசீம், “உன்னுடைய தனிப்பட்ட வஞ்சகத்தை எல்லாம் வீட்டுக்குள் வெளியில் வைத்துக்கொள்!” என்று கோபமாக நிறைய திட்டியிருந்தார்.

அதன் பின்னர் நேற்று தனலட்சுமியை அசீம் வேகமாக அடித்து தள்ளிவிட்டு டால் ஹவுஸுக்குள் சென்றார். ஆனால் தனலட்சுமி தடுத்து நின்றதால்தான், நான் அப்படி செய்தேன் என்றும் அசீம் விளக்கம் அளித்திருந்தார். அப்போது, பேசிய விக்ரமன், “நீங்கள் மட்டும் தனலட்சுமியிடம் நீயெல்லாம் ஒரு பொண்ணா என கேட்டீர்கள், இன்று நீங்கள் பண்ணியது தவறில்லையா? அப்படியா பிடித்து தள்ளிவிடுவீர்கள்?” என கேட்டார்.


இந்நிலையில் குயின்ஸி, அசீமிடம்,  “தனலட்சுமியை பார்த்து நீ எல்லாம் ஒரு பொண்ணா என்று நீங்கள் கேட்கவே இல்லையா ?.. அப்படி கேட்டு விட்டு இன்று நீங்களே அவளை அப்படி தள்ளி விடுவது பற்றி பேசுகிறார்கள்!” என்று கேட்க, அதற்கு அசீமோ, “நான் அப்படி கேட்கவே இல்லை” என்று உறுதிபடக் கூறினார். அப்போது குயின்ஸி, “இல்லை.. நீங்கள் சொல்லி.. உங்களால் நான் இன்ஃப்ளுயன்ஸ் ஆகி இரண்டு மூன்று தடவை தவறு செய்துவிட்டேன்” என்று சொல்ல, “அப்படியானால் மேற்கொண்டு இது பற்றி நாம் பேச வேண்டாம்” என்று அசீம் கோபமாக எழுந்து சென்றுவிடுகிறார்.






Advertisement

Advertisement

Advertisement