• May 03 2024

கோபி தான் லைசன்சைத் திருடியது என்ற உண்மையை உடைத்த எழில்- ராதிகா வீட்டுக்குப் போன பாக்கியா- Baakiyalakshmi Serial

stella / 7 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியா வீட்டுக்கு தன்னுடைய அம்மாவைப் பார்க்க வந்த கோபி, பாக்கியாவையும் பழனிச்சாமியையும் சம்மந்தப்படுத்தி பேசுகின்றார். அத்தோடு உன்னோட லைசன்ஸ் எப்பிடி அவன் கிட்ட போச்சு இன்னும் என்னெல்லாம் கொடுத்து வச்சிருக்கிற என்று கண்டபாட்டுக்குத் திட்டுகின்றார். அத்தோடு இது குறித்து வற்புறுத்திக் கேட்கின்றார்.


இந்த நேரம் பார்த்து எழில் வந்து பழனிச்சாமி சேர்கிட்ட லைசன்ஸ் எப்பிடிப் போச்சு என்று நான் சொல்கிறேன் என்கின்றார்.பின்னர் லைசன்ஸ் கோபி வந்து வீட்டுக்குள் திடிப் போய் ஹொட்டல் ஒன்றில் உடைத்துப் போன விஷயத்தைச் சொல்ல ராமமூர்த்தியும் ஈஸ்வரியும் அதிர்ச்சியடைகின்றனர். அத்தோடு பாக்கியா திருடன் என்று திட்டுகின்றார்.

ராமமூர்த்தி கோபியை வீட்டை விட்டு போகச் சொல்ல கோபி போகின்றார். அப்போது வாசலில் ராதிகா கோபியைக் கண்டு விடுகின்றார். பின்னர் வீட்டுக்கு போனதும் கோபி எதற்காக பாக்கியா வீட்டுக்குப் போனேன் தெரியுமா என்று கூறுகின்றார். பாக்கியா தன்னுடைய ஆபிஸிற்கு வந்து அவமானப்படுத்தியதாகம் அதனால் தான் அங்கே போனேன் என்றும் சொல்கின்றார்.


மேலும் அந்த வீட்டில இருக்கிறவங்க என் குடும்பம்.அவ தன்னுடைய குடும்பம் மாதிரி பிடிச்சு வைச்சிருக்கிறா என்று சொல்ல ராதிகா கவலைப்படாதீங்க, கண்டிப்பாக ஒருநாள் உங்க குடும்பம் உங்களைப் புரிஞ்சுப்பாங்க என்று சொல்கின்றார். தொடர்ந்து பாக்கியா வீட்டில் இனியாவுக்கு இந்த விஷயம் தெரிந்ததால் இனியா, டாடி இப்பிடிப் பண்ணிட்டாரே என்று புலம்புகின்றார்.


அப்போது எழில் இந்த விஷயத்தைச் சொல்லக் கூடாது என்று தான் நினைச்சேன், அவர் பண்ணின வேலைக்கு சொல்லாம இருக்க முடில என்று சொல்ல பாக்கியாஇ அவரை சும்மா விடக்கூடாது என்று கிளம்பிப் போய் ராதிகா வீட்டுக் கதவைத் தட்டுகின்றார். அப்போது ராதிகா கதவைத் திறந்து பார்த்த போது பாக்கியாவைக் கண்டதும் கோபியும் ராதிகாவும் அதிர்ச்சியடைகின்றனர். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement