• May 05 2024

என்னை அடிச்சிட்டு ஒரு Sorry கூட கேட்கேல – சீரியலில் நடந்த சம்பவம் குறித்து மனம் திறந்த ஆயிஷா...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகி தற்போது 11 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.இந்நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டபுள் ஏவிக்க்ஷன் நடத்தப்பட்டது. அதில் முதலாக ராம் வெளியேறினார், பின்னர் யாருமே எதிர்பாக்காதவாரு ஆயிஷா வெளியேறினார். 

இதனால் அவருடைய ரசிகர்கள் அனைவரும் மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்தனர்.அத்தோடு  ஆயிஷாவை வெளியேற்றியது விஜய் டிவியின் சதி என்று நெட்டிசன்கள் பலம் விமர்சனம் செய்து வந்தனர். மேலும் இப்படியிருக்கும்போது பிக் பாஸ் வீட்டில் ஆயிஷா இருக்கும் போது ஏவிக்ஷன் நாமினேஷனில் பலமுறை ஆயிஷாவின் பெயரை சொல்லியதில் ரட்சிதாவும் ஒருவர்.



ரட்சிதா பிரபல சின்னத்திரை நடிகையாவார், இவர் கன்னட சிரியலில் அறிமுகமானாலும் தமிழில் ஒளிபரப்பான “பிரிவோம் சந்திப்போம்” என்ற சீரியலின் மூலம் தான் பிரபலமானார். இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல சிரியல்களில் நடித்திருக்கிறார். இவ்வாறுஇருக்கையில்  நடிகைகளான ஆயிஷா மற்றும் ரட்சிதாவும் ஒன்றாக இந்த பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்டிருந்தனர். ஆனால் இவர்கள் இருவருகம் அதிகமாக பேசிக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்  இப்படியிருக்கும் போது கடந்த வாரம் ஆயிஷா பிக் பாஸை விட்டு வெளியேறிய நிலையில் பிரபா செய்தி ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் ரட்சித்தாவுடனான தன்னுடைய நட்பு குறித்து ஆயிஷா கூறியிருந்தார். அதில் ரட்சிதாவும் நானும் ஒன்றாக ஒரு படப்பிடிப்பில் சண்டை காட்சி நடந்து கொண்டிருக்கும் போது எனக்கு அடிபட்டது. அப்போது என்னிடம் மன்னிப்பு கேட்பதை தாண்டி ‘நன்றாக உள்ளீர்களா என்று ஒரு வார்த்தை கூட கேட்க்கவில்லை அது எனக்கு வருத்தமாக இருந்தது.


எனனே நான் ரட்சிதா மற்றவர்களை மதிக்காதவர் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் நான் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற போது நான் முற்றிலும் மாறுபட்ட ரட்சித்தாவை பார்த்தேன். நான் சீரியலில் அவரை பார்த்ததை விட பிக் பாஸ் வீட்டில் அதிகமாக அவருடன் பழகியிருக்கிறேன். எனவேதான் நான் அவருடைய பெண்மையை ஒரு டாஸ்கில் காப்பாற்றினேன். அத்தோடு நாட்கள் போக போக ஏன் என்த விஷியங்களுக்கும் உங்களுடன் பாக்களிப்பு இருப்பதில்லை என்றுதான் கேட்டேன் தவிர ரட்சிதா நாடகமாடுகிறார் என்று நான் சொல்லவில்லை.


ஏன் எந்த விஷியங்களுக்கும் ரட்சித்தாவின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது அது ஏன்? என்பதுதான் என்னுடைய கேள்வி என்று ஆயிஷா கூறியிருந்தார். அத்தோடு அசீம் அடிதடி செய்தால் தான் பிக் பாஸ் என்ற எண்ணம் இருந்திருக்கலாம், அதோடு பிக் பாஸ் ரசிகர்களுக்கும் அதனை விரும்பியிருக்கலாம் இதனால்தான் இவ்வளவு நாள் அசீம் பிக் பாஸ் வீட்டிலேயே உள்ளார்.அத்தோடு இந்த வாரம் மணிகண்டன் குறைவான வாக்குகள் பெற்றதாக கேள்விப்பட்டேன் ஒருவேளை அவர் இந்த வாரம் வெளியேறலாம் என்றும் பிக் பாஸ் சீசன்6ன் வெற்றியாளர் ஷிவின் தான் என்று பல விஷியங்களை அந்த பேட்டியில் பகிர்ந்திருந்தார் நடிகை ஆயிஷா.

Advertisement

Advertisement

Advertisement