• May 09 2024

பல ஆண்களிடம் ஆயிஷா கேட்டு வாங்கும் பொருள்-அதற்கு இப்படியொரு அர்த்தமா..முன்னாள் காதலர் உடைத்த உண்மை..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஆயிஷா அணிந்திருக்கும் செயின் குறித்த உண்மையை உடைத்துள்ளார் முன்னாள் காதலர்.

 பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஆயிஷா கடந்த ஞாயிற்றுக் கிழமை எபிசோடில் நடிகர் கமல்ஹாசனிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டார்.அதாவது  தன்னைப்பற்றி தவறாக சித்தரிக்க வேண்டாமென அவர் கமலிடம் கூறியது பெரும்சலசலப்பை  ஏற்படுத்தியது. இதனால் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.


இவ்வாறுஇருக்கையில்  அவரது முன்னாள் காதலர் அளித்துள்ள பேட்டி சமூக வலைதளங்களில் பெரும் பேசு பொருளாகியுள்ளது.அதாவது  ஆயிஷாவின் முன்னாள் காதலரான தேவ், ஆயிஷாவுக்கு சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்ததே தான் என்றும் சீரியல்களில் நடிக்க தொடங்கிய பின்னர் நடிகர் விஷ்ணுவை காதலித்த அவர் தன்னை கழட்டிவிட்டுவிட்டதாக கூறியுள்ளார்.

எனினும் இதுபோல் பல பேரை காதலித்து ஆயிஷா ஏமாற்றியுள்ளார் என்றும் பகீர் கிளப்பியுள்ளார். அத்தோடு  யாரையெல்லாம் காதலிக்கிறாரோ அவர்களையெல்லாம் புருஷன் என்று கூறிக்கொள்வார் என்றும் கூறியுள்ளார். அத்தோடு அவர் புருஷன் மாமா என்று எல்லாம் கூறுவார்.தன்னிடம் நெருக்கமாக பழகுபவர்களிடம் தாலி வாங்கி போட்டுக்கொள்வார் என்றும் கூறியுள்ள தேவ், தன்னிடமும் ஒரு தாலியை வாங்கி போட்டிருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

அத்தோடு  தான் வாங்கிக்கொடுத்த தாலியுடன் D என்கிற டாலரையும் சேர்ந்து போட்டிருந்தார் என்றும் இப்போது யோகேஷ் என்பவரை காதலித்து வருவதால் Y என்கிற டாலருடன் கூடிய தாலியை அணிந்துள்ளார் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே ஆயிஷா மீது கடுப்பில் உள்ள ரசிகர்கள் அவர் குறித்து வெளியாகும் இதுபோன்ற தகவலால் இன்னும் எரிச்சலாகியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement