• May 08 2024

திடீரென ஏ ஆர் ரஹ்மானை நீக்கி விட்டு அனிரூத்தை ஒப்பந்தம் செய்த அட்லி- இது என்ன புது கதையாக இருக்கு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் அட்லி.இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து தளபதி விஜய்யை வைத்து தெறி மெர்சல் பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார்.இவை அனைத்துமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இதனால் அடுத்ததாக பாலிவூட் இயக்குநரான ஷாருகானை வைத்து ஜவான் என்னும் திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.இப்படத்தின்  முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். 


 இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி. இதையடுத்து சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு மற்றும் தலைப்பு ‘ஜவான்’ என்று அறிவிக்கப்பட்டது.

 தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. சென்னையில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு காட்சிகளை அட்லி படமாக்கி வருகிறார். சென்னையில் ஷூட்டிங் நடக்கும்போது அதில் ஒருநாள் விஜய் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் முதலில் இசையமைப்பாளராக ஏ ஆர் ரஹ்மான்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது அனிருத்தான் இசையமைப்பாளர் என்பதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் தற்போது வட இந்தியா மற்றும் பாலிவுட்டில் ரஹ்மானுக்கு எதிரான மனநிலை அதிகமாக இருப்பதால்தான் அவரை நீக்கிவிட்டு படக்குழு அனிருத்தை ஒப்பந்தம் செய்ததாக சொல்லப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement