• May 11 2024

நடிகை ரீமா சென் இப்போது எப்படி இருக்கிறார் என்று தெரியுமா..? வெளியானது லேட்டஸ்ட் போட்டோஸ்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் விஷால் அறிமுகமான ‘செல்லமே ‘ படத்தில் அறிமுகமானவர் தான்  நடிகை ரீமா சென். 1981ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். கொல்கத்தாவில் பள்ளிப்படிப்பை முடித்த ரீமா சென் மும்பையில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். அதன்பின்னர் மாடலிங் துறையில் சில காலம் இருந்தார் ரீமா சென். உண்மையை சொல்லப் போனால் 90ஸ் பெயர் போன நடிகையாக திகழ்ந்தார்.



தமிழில் மின்னலே, பகவதி,, தூள்,வல்லவன், ஆயிரத்தில் ஒருவன் என குறிப்பிடத்தக்க பல படங்களில் நடித்து இருப்பவர் ரீமா சென்.மேலும் அவர் தமிழ் சினிமாவில் கடைசியாக நடித்த படம் சட்டம் ஒரு இருட்டறை.

அதன் பின் 2012ல் அவர் ஒரு பிரபல தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அத்தோடு அவர்களுக்கு தற்போது ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது.

ரீமா சென் திருமணத்திற்கு பின்னர்  சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். அவர் தற்போது குடும்பத்துடன் தான் நேரத்தை செலவிட்டு வருகிறார். 

இந்நிலையில் அவர் அவ்வப்போது குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...







 


Advertisement

Advertisement

Advertisement