• May 07 2024

குழந்தைகளையாவது விட்டு வைங்க- தன்னுடைய இரு மகள்களையும் ட்ரோல் செய்தவருக்கு குஷ்பூ கொடுத்த பதிலடி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் தொடக்கம் தற்பொழுது வரை நடித்து வரும் நடிகை தான் குஷ்பூ. கதாநாயகியாக நடித்து வந்த காலத்திலும் சரி தற்பொழுதும் சரி இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

நடிப்பைத் தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். அதனால் அவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் வெளிப்படையாக பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவரை மோசமாக ட்ரோல் செய்து ட்வீட்களும் அதிகம் வரும். அவர் அதற்கெல்லாம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார்.


மேலும் அவர் தனது குடும்பத்தினருடன் இருக்கும் போட்டோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.சமீபத்தில் குஷ்பூ அவரது இரண்டு மகள்களின் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு ஒரு நபர் 'இவர்கள் இருவருமே மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறார்கள்' என ட்ரோல் செய்து இருக்கிறார்.


அதற்கு பதிலடி கொடுத்த குஷ்பூ "20 மற்றும் 22 வயதாகும் பெண்கள் எதற்காக சர்ஜரி செய்துகொள்ள வேண்டும். குழந்தைகளையும் ட்ரோல் செய்வது வெட்கக்கேடு. குழந்தைகளையாவது விட்டு வைங்க" என அவர் பதிலடி கொடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement