தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டில் புது புது பிரச்சனைகள் உருவாகி வரும் நிலையில், நாளுக்கு நாள் நிகழ்ச்சி முழுக்க விறுவிறுப்பாக தான் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் 17 மற்றும் 18 நாளில் நடந்தவை பற்றி பார்ப்போம்.
அதாவது தற்பொழுது நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் நடைபெற்று வருகின்றது. இதனால் போட்டியாளர்களுக்கிடையில் மோதல் ஏற்படுகின்றது.அதிலும் அசீம் ஷெரினாவைத் தள்ளி விட்டது தனலக்ஷ்மி தான் என்ற வாக்குவாதத்தில்ஈடுபடுகின்றார். தொடர்ந்து அசல் அசீமின் பொம்மையைக் கொண்டு ஓட முற்படுகின்றார்.
அப்போது போட்டியாளர்கள் அவரை கடக்க விடாது தடுக்கின்றனர். அப்போது அசீம் பொம்மையை வெளேியே எறிகின்றனர். இதனால் கோபமான அசீம் தனலக்ஷ்மிடை நெஞ்சில் பிடித்து தள்ளி விட்டு தனது பொம்மையை உள்ளே கொண்டு போய் வைக்கின்றார். அதனைப் பார்த்த விக்ரமன் கேள்வி கேட்கும் போது இருவருக்கும் அடையில் மோதல் ஏற்படுகின்றது.
விக்ரமனுடன் மகேஷ்வரியும் ஷெரினாவும் இணைந்து சண்டை போடுகின்றனர். தொடர்ந்து 18ம் நாள் ஆரம்பமாகியது. காலையிலேயே லவ் பண்ணலாமா வேணாமா? என்ற பாடல் போடப்பட்டது. இதனால் ராபேட் மாஸ்டர் தனக்கு கை காட்டுவதாக நினைத்து ரச்சிதா கோபமானார்.தொடர்ந்து ராபேட் ரச்சிதாவுக்காக எதுவும் செய்யவில்லை எனக் கூறி இருந்தார்.
பின்னர் டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது அசீம் அமுதவாணனின் பொம்மையை எடுத்து ஷெரினாவிடம் கொடுத்து ஒளித்து வைத்ததால் இருவருக்கிடையிலும் மோதல் ஏற்படுகின்றது. அதில் அமுதவாணனன் நக்கலாகப் பேசிய விடயங்கள் அசீமை இன்னும் கோபப்படுத்தியதால் அவர் வார்த்தைகளை விட்டுக் கொண்டே இருந்தார். அத்தோடு ஷெரினா அசீம் பொம்மையை உள்ளே கொண்டு போன போது மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்படுகின்றது. இதனால் பிக்பாஸ் ஷெரினாவை இந்த டாஸ்கில் இருந்து வெளியேற்றினார். இவ்வாறாக சண்டை சச்சரவுகளுடன் இந்த எப்பிஷோட் முடிவடைந்தது.
Listen News!