• Apr 26 2024

திருமண நாளை சிறப்பாகக் கொண்டாடிய ஆர்யா - சாயிஷா ஜோடி தம்பதிகள்- வைரலாகி வரும் போட்டோஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா நடிகை சாயிஷாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவரும் 'கஜினிகாந்த்' படத்தில் ஒன்றாக இணைந்து நடித்ததன் மூலம் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.


இவர்களின் திருமணம் மிகவும் பிரமாண்டமாக ஹைதராபாத்தில் இவர்கள் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் சாயிஷா ஆர்யாவுடன் சேர்ந்து 'டெடி' மற்றும் கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடிப்பில் கமிட்டான படத்தில் மட்டுமே நடித்த நிலையில், பின்னர் ஒரேடியாக திரையுலகை விட்டு விலகினார். 


சாயிஷா திரைப்படங்களில் நடிப்பதில்லை என்றாலும், சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். எனினும் கர்ப்பமாக இருக்கும் தகவலை கூட வெளியிடாமல் குழந்தையை ரகசியமாக பெற்றெடுத்தார். ஆர்யா தந்தையாகி விட்டதாக அவருடைய நண்பர் விஷால் அவருக்கு வாழ்த்து தெரிவித்து போட்ட பதிவு மூலம் சாயிஷா - ஆர்யா தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்தது தெரியவந்தது.


குழந்தைக்கு ஒரு வயது ஆன பின்னரும், மகளின் புகைப்படங்களை வெளியிடாமல் இருந்த, ஆர்யா - சாயிஷா ஜோடி தற்பொழுது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது இருவரும் திருமண நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். இது குறித்த புகைப்படங்ள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தககது.





Advertisement

Advertisement

Advertisement