சின்னத்திரையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் பலர் இருக்கின்றனர். இவர்களில் கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளங்களில் பேசப்படும் ஜோடியாக வலம் வருபவர்கள் தான் அர்னவ்- மற்றும் திவ்யா.இவர்கள் திருமணம் செய்து கொண்டதையும் திவ்யா கர்ப்பமாக இருப்பதையும் அண்மையில் தான் திவ்யா அறிவித்திருந்தார்.
இந்நிலையில்,கர்ப்பிணியாக இருக்கும் திவ்யா சில தினங்களுக்கு முன்பு அர்ணவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக புகார் அளித்தார். மேலும் தனது கரு எப்போது வேண்டுமானாலும் கலையலாம், என்று கூறி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதுமட்டும் இல்லாமல் தனது கணவர் அர்னவ் மீதும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து 2 வீடியோ பதிவுகளை வெளியிட்டார்
இந்த வீடியோ பதிவுகள் வைரலாகி வந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்த அர்னவ் திவ்யா மீது புகார் அளித்தார்.இந்நிலையில், திவ்யா அளித்த புகாரின்பேரில் சென்னை பூவிருந்தவல்லி பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த அர்னவை போலீசார் கைது செய்தனர்.அத்தோடு அர்னவ் தனடனையும் ஏமாற்றியதாக திருநங்கை ஒருவர் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நடிகை திவ்யா தனியார் தொலைக்காட்சிக்கு தற்போது பேட்டியளித்துள்ளார். அதில், "அர்னவ் திருந்தி வந்தால் ஏற்றுக்கொள்வேன். ஆனால் அதை அவரின் பெற்றோர் தான் வந்து சொல்ல வேண்டும். ஏனென்றால் பெற்றோர் பெயரை சொல்லி தான் அர்னவ் என்னை தவிர்த்தார். என்னுடன் வாழ்கிறேன் என்று சொன்னால் மட்டும் போதாது அதுமாதிரி வீட்டிலும் நடந்துகொள்ள வேண்டும். அர்னவ் வீட்டில் ஒருமாதிரியும் வெளியில் ஒருமாதிரியும் இருக்கிறார்.
அவர் சொல்வது ஒன்று செய்வது ஒன்று. எல்லாம் பொய். தன்னிடம் நேரில் வந்து பேசினால் மட்டுமே இதை பேசித் தீர்க்க முடியும். குழந்தை வேண்டும் என்றால், நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே வந்து பார்த்திருக்க வேண்டியதானே" எனக் கூறியுள்ளார். திவ்யாவின் இந்தப் பேட்டியும், கண்டிஷனும் மீண்டும் விஸ்வரூபமெடுத்து வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!