• May 03 2024

ஐஸ்வர்யா கழுத்தில் தாலி கட்டிய அர்ஜுன்- கேள்விக் குறியாகி நிற்கும் ஷக்தியின் வாழ்க்கை- பரபரப்பான Eeramaana Rojaave Season 2 Promo

stella / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே சீசன் 2. இதில் அர்ஜுனும் ஷக்தியும் காதலித்து வந்த விஷயம் வீட்டில் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இதனால் ஷக்தியின் திருமணம் நின்று விட்டது.

இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பது குறித்து ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிரியா -காவ்யா, குடும்பத்தினருடன் அர்ஜூன் திருமணம் நடக்கும் இடத்திற்கு வருகின்றனர். அங்கு முன்னதாகவே ஐஸ்வர்யா கழுத்தில் தாலி கட்டுகிறார் அர்ஜூன். இதனால் சக்தியின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. 

விருப்பமில்லாமல் இந்த திருமணத்தை செய்துக்கொண்ட அர்ஜுனிடம் பிரியா கோபத்துடன் கேள்வி கேட்கிறார். விருப்பமில்லாமல் நடந்த இந்த திருமணம் செல்லாது என்று கூறுகிறார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் அர்ஜூன் திணறுகிறார். இந்நிலையில், அர்ஜூனை சக்திதான் ஒருதலையாக காதலித்திருப்பார் என்று அவரது அத்தையும் மாமியாருமான மஞ்சுளா குற்றம் சாட்டுகிறார். 

இதனால் அவர்களின் காதல் கேள்விக்குறியாகிறது. இதையடுத்து பரிதவிப்புடன் அர்ஜூனிடம், தான் மட்டும்தான் காதலித்தேனா, அர்ஜூன் காதலிக்கவில்லையா என்று கண்ணீருடன் சக்தி கேள்வி எழுப்புகிறார் ஆனால் அர்ஜுன் வாயை மூடிக் கொண்டு நிற்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement