சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, விஜயா பாவாடை தாவணி கட்டிக் கொண்டிருப்பதனைப் பார்த்து வீட்டில எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். அதைப் பார்த்த விஜயா என்ன எல்லாரும் பாக்காததைப் பார்த்த மாதிரி நிக்கிறீங்க என்கிறார். பின் அண்ணாமலை விஜயாவைப் பாத்து இது என்ன கோலம் என்று கேட்கிறார். மேலும் இந்த வயசில எதுக்கு இந்த தேவையில்லாத வேலை எல்லாம் என்று சொல்லுறார்.
அதனை அடுத்து ஸ்ருதி விஜயாவை போனில போட்டோ எடுக்கிறார். பின் முத்து இந்த dress போட்டுக் கொண்டு வெளியில எல்லாம் போக வேணாம் என்கிறார். இதனைத் தொடர்ந்து விஜயா ரோகிணி கொடுத்த செயினைப் போட்டுக்கொண்டு அங்கிருந்து கிளம்புறார். பின் முத்து சத்தியா பாஸ் பண்ணதுக்கு சாப்பாடு செய்து கொடுக்கணும் என்று மீனாவைப் பாத்துச் சொல்லுறார்.
இதனை அடுத்து ரோகிணி தன்ர அம்மாவுக்கு போன் எடுத்து கிரிஷ் எப்புடி இருக்கான் என்று கேட்கிறார். அதுக்கு ரோகிணி அம்மா அவன் நல்லா இருக்கான் உன்னத் தான் பாக்கணும் என்று daily சொல்லுறான் என்கிறார். அதுக்கு ரோகிணி சரி ok நான் இப்பவே அவனுக்கு பிடிச்சது எல்லாம் வாங்கிக்கொண்டு வந்திடுறேன் என்கிறார்.
அதனை அடுத்து விஜயாவும் பார்வதியும் சிந்தாமணி வீட்ட போய் நிற்கிறார்கள். அப்ப பாவாடை தாவணியோட பார்வதியைப் பார்த்த சிந்தாமணி ரொம்பவே நல்லா இருக்கு என்று சொல்லுறார். இதனைத் தொடர்ந்து சிந்தாமணி அங்கிருந்த எல்லாருக்கும் விஜயாவை அறிமுகம் செய்து வைக்கிறார். பின் எல்லாரும் ஒன்னா சேர்ந்து டான்ஸ் ஆடுறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!