• May 03 2024

பணப்பெட்டியை எடுத்தது பற்றி மனம் திறந்து பேசிய அமுது...இது தான் விஷயமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இவ்வாறுஇருக்கையில்  பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார் அமுதவாணன். இதனால் சக போட்டியாளர்கள் அனைவரும் சோகமடைந்துள்ளனர்.

முன்னதாக, பைனலிற்கு அசீம், விக்ரமன், மைனா, அமுதவாணன் மற்றும் ஷிவின் ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர். இதனிடையே வீட்டுக்குள் முன்னதாக வீட்டில் பண மூட்டையை பிக்பாஸ் அறிமுகம் செய்திருந்தார். இந்த அறிவிப்பு வெளிவந்த உடனேயே கதிர் தான் பண மூட்டையுடன் வெளியேறுவதாக தெரிவித்தார். இதனால் போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் பணப்பெட்டி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அதிலும் பண மூட்டையை போலவே நேரம் ஆக, ஆக பணத்தொகையும் அதிகரிக்கும் என பிக்பாஸ் அறிவித்திருந்தார். இந்நிலையில், அமுதவாணன் பணப்பெட்டியை எடுத்து தான் வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார். இதனால் திடீரென பிக்பாஸ் வீடு சோகமடைந்துள்ளது.



இவ்வாறுஇருக்கையில், வீட்டினுள் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது அமுதவாணன் பணப்பெட்டியை எடுத்து ஏன் என்பது பற்றி பேசியிருக்கிறார். அவர் பேசும்போது,"கெத்த மெயிண்டைன் பண்ணி கடைசில இப்படி ஆகிட்டோமோ-ன்னு யோசிக்க கூடாது. இது எப்படியும் எனக்கு யூஸ் ஆகும். இது நெறய ஹெல்ப்-ஆ இருக்கும். அதுனால எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்னு தான் எடுத்தேன்" என்கிறார்.


அப்போது அவருக்கு ஆறுதல் கூறும் விக்ரமன்,"எப்படியா இருந்தாலும் 5 பேர்ல ஒருத்தர் தான் வெற்றியாளர். அதுனால இது நல்ல முடிவு. நீங்க எட்டரை கோடி தமிழ் மக்களோட நெஞ்சத்துல ராஜாவா இருக்கீங்க. இந்த வீட்டுல நான் அதிகமா பேசி, சிரிச்ச ஒரு நபர் என்றால் அது நீங்கதான். நான் வந்த புதிதில் சொன்னேன்.அத்தோடு  எளிய மக்களுக்கான கலையை நீங்க கையில வச்சிருக்கீங்க. நீங்க ஒரு எளிய கலைஞன். அதேநேரத்துல பிரம்மாண்ட கலைஞன். பொதுமக்களோட அன்பையும் பெற்றுட்டீங்க.



கமல் அண்ணா சொன்னது மாதிரி இது உங்களுக்கான வழி பெரிய வழி. மேலும் இது ஒரு நிகழ்ச்சி அவ்வளவுதான். இதுக்கு அப்புறம் உங்களுக்கு பெரிய வாழ்க்கை இருக்கு. நீங்க காமெடியன் மட்டும் இல்ல ஹீரோவும் கூட. நீங்க கதாநாயகனா வருவீங்க பாருங்க" எனச் சொல்ல அமுதவாணன் விக்ரமனிடத்தில் நன்றி கூறுகிறார்.

Advertisement

Advertisement

Advertisement